நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?
Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..
இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் மிகவும் நெருக்கடியை சந்தித்து இருந்தால் எந்த நகர்வுகளையும் எங்களாலும் கூட இருந்தவர்களினாலும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு உக்கிரமாக கொடிய தாக்குதல்களை மக்கள் மீது திணித்து விட்டிருந்தது சிங்களப்படைகள். உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பலநாட்கள் அங்குமிங்குமாக தவித்த எங்களுக்கு இன்று விசப்புகையினை மாத்திரமே சுவாசிக்க முடிந்ததால் கூட வந்த பலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். அவர்களை அந்த நிலையில் எங்களால் அழைத்து போக முடியாத நிலையில் இருந்தோம். உணவின்றி நீரின்றி நடக்க முடியாத நிலையில் காணப்பட்டனர். திரும்பும் திசையெல்லாம் கண்ணுக்கு எந்த இடமும் தெரியவில்லை எல்லா இடங்களும் புகைமண்டலமாகவே காணப்பட்டது. எங்களுடன் 121பெண்போராளிகள் உட்பட ஆண்போராளிகள் 43 பேரும் பொதுமக்கள் 18 பேரும் இருந்தனர். அதில் காயம்பட்ட பெண்போராளிகள் வேகமாக பாதிக்கப்பட்டனர். இரத்த ஓட்டம் உணவின்றிய சோர்வு என கந்தக காற்றின் விசவாயு சுவாசம் என அவர்களை நினைவிழக்க செய்திருந்த்து. ஒருவாறாக ஒரு வீட்டில் கிணற்றில் நீர் கிடைத்த நிலையில் அண்ணா மற்றும் கூட இருந்த போராளிகள் பலர் உதவியுடன் நீர் கொடுத்தனர். அப்போது பலருக்கு உயிர் போயிருந்த நிலையில் காணப்பட்டனர். அத்தனைபேரும் காயப்பட்ட போராளிகளின் உயிர் போயிருந்தது . அப்போது இன்னும் ஓர் துயரச்சம்பவம் அந்த வீட்டில் காண கூடியதாக இருந்தது. அது ஒரு இளம் குடும்பமாக இருக்கலாம். கணவன் மனைவி முப்பது வயது மதிக்க தக்கவர்கள். அதோடு இளம் பெண் 15 வயது மதிக்க தக்கவர்கள் எல்லோரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடிவு எடுத்தோம். கிட்டத்தட்ட அந்த இருபது நிமிட இடைவெளியில் கூட இருந்தவர்களில் 35 பேர் இறந்து இருந்தனர். பெண்கள் 24 பேர் உயிர் போயிருந்தது. ஒருவாறாக வெளியேற முற்பட்ட எங்களுக்கு மீண்டும் துயரம் காத்திருந்த சம்பவம் அது எங்கள் பின்பகுதியால் சென்றிருந்த சிங்கள படை பொதுமக்கள் வெளியேறும் பாதையை நோக்கி எறிகணைத் தாக்குதல் தொடுத்தது. இதனால் கூட்டமாக சென்ற மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் எங்கள் குழுவில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மாண்டு போயினர். இப்படி எத்தனை காட்சிகள் எத்தனை துயரங்கள் தாண்டி வந்மோம். மறக்க முடியுமா. காலம் ஓடிப்போகலாம் மனதில் இருக்கும் வடுக்களும் உடலில் இருக்கும் காயங்களின் தழும்புகளும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கும். பவித்ரா_தமிழினி
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொட்டும் மழையிலும் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். (படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா)
ட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு. அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.
சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்... என்பதுதான் உண்மை!
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்
காடையர் கூட்டத்தினால் சீரழிக்கப்பட்டு , கொலை செய்யப்பட்ட மாணவி செல்வி. சிவலோகநாதன் விந்தியா மரணம் பேரிடியானது. இவரின் குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான குற்றவாளிகளுக்கு மிக கொடூரமான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற விஷக் கிருமிகள் சமுகத்திலிருந்து முற்றாக அழிக்கப் பட வேண்டும். அது, இது போன்றவர்கள் சார்ந்த சமுகத்தினால் மட்டுமே முடியும். என்பதோடு இந்த ஈனச் செயலை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் தற்போது இளம் இயக்குநர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
நயன்தாரா, ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக
அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென்றும் இரண்டு முதல் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்களே பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
40 ஆண்டுகளாக வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள கணக்கின் தவறை சுட்டிக் காட்டி, கர்நாடக தலைமை நீதிபதியிடம் முறையிட சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.
வேட்டைக்கு புறப்பட்ட சிவனார் மடத்துவெளி பிள்ளையார் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் மற்று அனைத்து சிறிய கோவில்களுக்கும் வந்து செல்லும் அற்புதமான காட்சி
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்தனர். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி திங்கள்கிழமை காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ
கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
.புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய இணையதளம் இன்று ஆரமபம்
இன்று முதல் புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடைச் சிவன் ஆலயதுக்ககாக எம்மால் உர்ய்வாக்கபட்ட புதிய இணையதளம் இன்று முதல் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது