புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014

சிவில் அதிகாரிகளின் ஒத்தாசையுடன் அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; வடமாகாண விவசாய அமைச்சர் காட்டம் 
சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை
சேர்த்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் தமது கடமைகளை புறம்தள்ளிவிட்டு இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
 
அச்சுவேலியில் காணி சுவீகரிப்புக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐங்கரநேசன் கோபம் மேலிட்ட நிலையில் பொலிஸ், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் நடைமுறையை முன்னிலைப்படுத்தி கூறி விசனம் தெரிவித்தார்.
 
காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் கடந்த திங்கட்கிழமை அச்சுவேலி யூனியன் இராணுவ முகாமுக்கு அருகில் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் வருகை தந்திருந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரோடும் நிலஅளவை அதிகாரிகளோடும் ஆக்ரோ­மான கருத்துப் பரிமாறல் இடம்பெற்றது.
 
பெருமளவில் பொதுமக்களும் கூடி இருந்தனர். கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகளும் காணப்பட்டனர். அமைச்சர் கோபமடைந்த நிலையில் கூறிய கருத்துக்களை பொலிஸார் மற்றும் அலுவலர்கள் ஏற்றுக் கொண்டதோடு சமயோசிதமாக பேசிக்கொண்டனர். அத்துடன் வலி.கிழக்கு பிரதேச செயலருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
 
அமைச்சர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்; அரசின் முறைகேடான செயற்பாடுகள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளன. சிவில் கட்டமைப்புகள், சிவில் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் தொடர்பு நிலை அலுவலர்களை முறைகேடான முறையில் அரசு பயன்படுத்தி இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புச் செய்கின்றது.
 
இந்த விடயத்தில் அலுவலர்களும் தமது நாளாந்த கடமைகளைத் தவிர்த்து இராணுவத்துக்கு ஆள்களைத் திரட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையிலேயே காணி சுவீகரிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்''  என்று தெரிவித்தார்.

ad

ad