![]() சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். |
-
19 ஜூலை, 2025
உதவிப் பிரதேச செயலர் தமிழினி மரணமான வழக்கில் கணவன் கைது! [Friday 2025-07-18 16:00]
18 ஜூலை, 2025
இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி- வலி.கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம். Top News [Friday 2025-07-18 07:00]
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை- மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்! [Friday 2025-07-18 07:00]
![]() யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. |
17 ஜூலை, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு நெருக்கடி! [Thursday 2025-07-17 07:00]
![]() கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். |
தேர்தல் முடிந்து 2 மாதங்களாகியும் 50 சபைகளில் ஆட்சியமைக்கவில்லை! [Wednesday 2025-07-16 16:00]
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று சுமார் 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், 50இற்கும் மேற்பட்ட சபைகளில் ஆட்சி அதிகாரத்தை அமைக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
தமிழரசு உறுப்பினரின் இடைநிறுத்தம்- தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு! [Thursday 2025-07-17 07:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது |
16 ஜூலை, 2025
பிரான்சில் வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை! வெடித்தது மக்கள் போராட்டம்!
பிரான்சில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும்
செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது
புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கும்! [Wednesday 2025-07-16 07:00]
![]() பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய சட்டம் இயற்றப்படும் வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் முறைகேடாக பயன்படுத்துவார்களாயின் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
கனடா செல்வதற்கு 80 இலட்சம் ரூபாவை கொடுத்து ஏமாந்தவர் உயிரை மாய்த்தார்! [Wednesday 2025-07-16 07:00]
![]() கனடா செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
“அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்” - ஓ.பி.எஸ் அதிரடி! [Tuesday 2025-07-15 07:00]
![]() அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இனி ஒ.பி.எஸ் சேர்க்கப்பட மாட்டார் என எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்கள் உறுதியாக கூறு வருகின்றனர். இதனால், அதிமுக மீட்புக்குழு என்பதை விட தனியாக கட்சி ஆரம்பித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட சீட்களை பெறலாம் என்ற யோசனையில் ஓ.பி.எஸ் இருப்பதாக தகவல் வெளியானது |
100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை’ - துப்புரவு தொழிலாளி கொடுத்த புகாரால் பரபரப்பு! [Tuesday 2025-07-15 16:00]
![]() 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். |
இஸ்ரேலுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவு- 9 மாதங்களுக்குப் பின் இளைஞனுக்கு பிணை! [Tuesday 2025-07-15 18:00]
![]() சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார் |
காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! Top News [Tuesday 2025-07-15 18:00]
![]() வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
14 ஜூலை, 2025
7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூடுகள் - 37 பேர் பலி! [Monday 2025-07-14 16:00]
![]() இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார் |
பொலிஸ் புலனாய்வாளர்கள் கடத்திச் சென்று தாக்குதல்- இளைஞன் காயம். [Monday 2025-07-14 16:00]
![]() காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். |
பகிரங்க வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! [Monday 2025-07-14 16:00]
![]() சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்
அனுர மீற்றர் அறிமுகம் - அரசைக் கண்காணிக்கத் தொடங்கியது! [Monday 2025-07-14 07:00]
![]() வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது |
வெளிவந்த ஆதாரங்களை மூடி மறைக்க முனைகிறதா தமிழரசுக் கட்சி? [Monday 2025-07-14 07:00]
![]() 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
13 ஜூலை, 2025
டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா செவ்வந்தி ! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக
தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு
நெடுந்தீவில் 14 பேருடன் மூழ்கிய படகு!- அனைவரும் பத்திரமாக மீட்பு. [Saturday 2025-07-12 15:00]
![]() குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். |
கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள்
மரண அறிவித்தல். நாகலிங்கம் சுந்தரானந்தன்
10 ஜூலை, 2025
இன்றுடன் இடைநிறுத்தப்படும் அகழ்வு-இதுவரை 63 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2025-07-10 07:00]
![]() செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது |
இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி -ட்ரம்ப் அறிவிப்பு! [Thursday 2025-07-10 07:00]
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது |
மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? [Wednesday 2025-07-09 16:00]
![]() பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் |
விமல் வீரவன்ச சிஐடியில் முன்னிலை! [Wednesday 2025-07-09 16:00]
![]() தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
2 ஜூலை, 2025
கனடாவில் உதைபந்தாட்டத் தொடர் : தமிழீழ மகளிர் அணி வெற்றி
கனடா (Canada) - மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான
செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரங்கள் தற்போது அதிகமாக
செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி
ஓமந்தையில் தனியார் காணியை அபகரித்து பொலிசார் விகாரை அமைக்க முயற்சி! [Tuesday 2025-07-01 17:00]
தமிழரசின் மன்னார் மாவட்ட கிளை பொருளாளர் பதவி விலகல்- சாள்ஸ் நிர்மலநாதனும் விலக முடிவு. [Tuesday 2025-07-01 17:00]
![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளா |
29 ஜூன், 2025
250 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! [Sunday 2025-06-29 07:00]
![]() இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது |
யாரைக் காப்பாற்ற செம்மணிப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? [Sunday 2025-06-29 07:00]
![]() செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார் |
28 ஜூன், 2025
வடக்கில் படைமுகாம்களை அகற்றக் கூடாது! [Saturday 2025-06-28 15:00]
![]() “சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார் |
27 ஜூன், 2025
இஸ்ரேல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலையைக் கண்டிக்கிறது ஸ்பெயின்
வெப்ப அலை: கிறீஸ் கடலோர நகரங்களின் தீப்பிடித்து எரிகின்றன!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்! [Friday 2025-06-27 06:00]
![]() பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார் |
செம்மணிப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Friday 2025-06-27 06:00]
![]() செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது |
26 ஜூன், 2025
போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்
கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்M P.
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்
அர்ச்சுனா எம்.பி..நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி
24 ஜூன், 2025
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்களை இரத்து செய்த நிறுவனங்கள்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலை காரணமாக
போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத்
கட்டார் அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்!
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை
வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி - பனங்காட்டான்
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம்
பளை சிறீதரன் ஆதரவு தமிழரசிடம்
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான
செம்மணியில் தொடங்கியது அணையா விளக்கு போராட்டம்! Top News [Monday 2025-06-23 16:00]
![]() மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர். |
21 ஜூன், 2025
மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானிடம் மற்றுமொரு பிரதேச சபையில் தமிழரசுக்
மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
20 ஜூன், 2025
கண்ணகி அம்மன் கோயிலில் கோடிக்கணக்கான சொத்தை கொள்ளை அடித்த தலைமைக்கு எதிரான கண்டன போராட்டம்-
====================
ஆலயம் மக்களின் சொத்து. மக்களின் மத்தியில் இருந்தே நிர்வாக தெரிவு. தூய்மையான வரவு செலவு அறிக்கை தேவை. பரம்பரை பணக்கார நிர்வாகம் தேவையில்லை. ஆலயத்தில் பொதுமக்களின் மத்தியில் நிர்வாகத் தேர்வை நடத்து. நியாயத்துக்காக போராடும் மக்களின் மீது பண பலத்தை வைத்து அதிகாரத்தை பிரயோகிக்காதே.
இது போன்ற கோஷங்களை முன்வைத்து நாளை கண்ணகி அம்மன் ஆலய முன்றல் மக்களின் போராட்டத்தினால் முழு புரட்சி வெடிக்க உள்ளது வைக்காதே புங்குடுதீவு கண்ணகி அம்மன் என வழங்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் நாளை ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை புங்குடுதீவு மக்கள் ஒன்றிணைந்து தற்போதைய ஆலய தலைவருக்கும் அவர் சார்ந்த நிர்வாகத்தினருக்கும் எதிராக கண்டனபோராட்டம் ஒன்றை நடத்தஇருக்கிறார்கள்
வரலாற்று பெருமைமிக்க எமது ஊரின் கண்ணகி அம்மன் ஆலயம் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதியாலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பினாலும் சேர்க்கப்பட்ட சுமார் 67 கோடி ரூபா செலவில் புதுப்பொலிவோடு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது ஆனால் இந்த திருப்பணியிலும் கும்பாபிஷேகத்தின் பின்னரும் ஆலயத்தின் தலைமையும் நிர்வாகமும் பெரும் குளறுபடிகளையும் ஊழல்களையும் சொத்து நிதி கையாடல்களையும் செய்திருப்பது பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது இந்த வருட திருவிழா காலத்தில் நடைபெற்ற உள்வீட்டு திருட்டு ஒன்று அதிர்ஷ்டவசமாக பிடிபட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு புரட்சி ஒன்று வெடித்திருக்கிறது தலைமை தனக்கு சார்பான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு நுணுக்கமான முறையில் திட்டமிட்டு பல தில்லு முல்லுகளை செய்து கோடிக்கணக்கான பணத்தினை கையாடல் செய்திருப்பது அறிய வந்துள்ளது தலைவர் ஒரு பிரபலமான தந்திரம் மிக்க பெரும் வியாபாரி என்பதால் தனக்குக் கிடைத்த இந்த தலைமை பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு சற்றும் ஆன்மீக இரண்டும் அற்று பயபக்தியற்று நீதிக்கு பயப்படாமல் தனது வியாபார தந்திரத்தை கையாண்டிருக்கிறார் முக்கியமான பெரிய ஊழலாக பணிக்கென்று மக்கள் அள்ளி வழங்கிய 67 கோடி ரூபாவை பணம் கைக்கு கிடைத்தவுடன் உடனுக்குடன் திருப்பணிகளை செய்து முடிக்காமல் பல காரணங்களை கூறி பின் போட்டு அல்லது இழுத்தடித்து பணத்தினை தனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் இதனால் நீண்ட காலம் எடுத்து திருப்பணிகளை செய்ய வேண்டி இருந்ததால் பொருளாதார மகிழ்ச்சி கொரோனா போன்ற காரணங்களாலும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது முக்கியமாக 30 கோடி ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்த போதும் என்பது வீத திருப்பணி வேலை முடிந்த கட்டத்தில் ஒப்பந்தக்காரர் கொரோனா பொருளாதார வீழ்ச்சி இன்ப வெட்டி காரணங்காட்டி 2 கோடி கூடுதாக தரும்படி கேட்டிருந்தார்( சுவிஸ் ஐங்கரன் அவர்களுடன் ஒப்பந்தக்காரர் நேரடியாக உரையாடிய ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்துள்ளது அதில் இந்த உண்மை ஒப்பந்தக்காரர்கள் வாய்மொழி மூலம் கிடைத்திருக்கிறது )அவர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முடியாது என்று கூறி மீதி 20 வீத வேலையை தானே தனது இஷ்டத்துக்கு செய்து முடித்து இருந்தார் அதற்கான செலவு 55 கோடியென அறிவித்திருக்கிறார் அதாவது மொத்தமாக 83 கோடி முடிந்து ஆகவும் மிகுதி 16 கோடி தனக்கு ஆலயம் தருமதி இருக்கிறது என்றும் அறிவித்திருக்கிறார் 30 கோடியில் முடிக்க வேண்டிய வேலையை 83 கோடியில் முடித்திருப்பதாக சொல்லுகிறார் இரண்டு கோடி ஒப்பந்ததாரருக்கு கொடுக்காமல் 55 கோடி அதற்காக செலவழித்து இருக்கிறேன் என்று சொல்லுகிறார் இது ஒரு பகிரங்கமான மாபெரும் ஊழல் மோசடி இவர் திடீரென கொழும்பில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான கடை ஒன்றினை வாங்கி இருக்கிறார் அதனை விட பல்வேறு வகையில் இவர் வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது இவற்றை எல்லாம் மக்கள் பகிரங்கமாக பல ஆதாரங்களோடு நிருபித்து வருகிறார்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு சம்பவத்தை பகிரங்கமாக காவல்துறைக்கு எடுத்துச் சென்று விசாரிக்க மறுத்து மறைத்து பல திருவிளையாடல் செய்திருக்கிறார் . 83 கோடியில் கட்டப்பட்ட ஆலயத்தில் மிக முக்கியமான காரியாலயத்துக்கும் பணப்பெட்டகத்துக்கும் மட்டும் காணொளி க மரா கருவி பொருத்தப்படாமல் திட்டமிட்டு தேவையில்லாத மற்றைய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த மை இங்கு எல்லாம் தான் சந்தேகம் கிளம்புகிறது மேலும் ஏராளமான பல காரணங்களுக்காக மக்கள் கிள்ர் ந்தெழுந்து நாளைய தினம் போராட இருக்கிறார்கள் ஊரில் உள்ள ஆலயத்தில் பொதுச்சபை மற்றும் நிர்வாக கூட்டங்களை விதிமுறைகளுக்கு மாறாக கொழும்பில் நடத்துவது வருடம் தோறும் 100வித வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காமை முறைப்படி ஆலயத்தில் வருடம் தோறும் பொதுச் சபை யை கூட்டி நிர்வாகத்தினை தெரிவு செய்யா மை முறைப்படி நிர்வாகத்தில் தீர்மானம் எடுத்து செய்யாமல் பல திருப்பணி வேலைகளை தனக்கு வருமானம் பெறக்கூடியதாக செய்தமை ஆலயத்தின் வரலாற்று முறைப்படி உள்ள விஷயங்களை தனது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்தமை உதாரணம் ஆதி கண்ணகி அம்மன் விக்ரகம் இல்லாமல் செய்து ஒரு சீமந்து காலடியை பதித்தமை நாள்தோறும் ஒரு லட்சம் ரூபா அன்னதானத்துக்கு என வாங்கி குறைந்த செலவில் அன்னதானத்தினை வழங்கி மிஞ்சுகின்ற பணத்துக்கு சரியான வரவு செலவு அறிக்கை காட்டாமை அன்னதான வழங்கும் முறைகளை மாற்றியமைத்தமை பொதுமக்கள் அடியார்களின் கருத்துக்களை உள்வாங்காமல் விமர்சனங்களை ஏற்காமல் சரியான வேளையில் நிர்வாகக் கூட்டம் பொதுமக்கள் கூட்டத்தினை நடத்தாமல் பின் வழியால் வேறு வழிகளில் பண பலத்தை வைத்து காவல் துறை சட்ட த்தரணிகள் என்று பணத்தினை செலவழித்து நியாயம் கேட்பவர்களை பயமுறுத்துதல் வழக்குக்கு இழுத்தல் ஆலயத்துக்கு அப்பாற்பட்டு வேறு வகையில் வழக்குகளை அவர்களுக்கு எதிராக ஆரம்பித்தமை அடியார்கள் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத கலாச்சாரம் வன்முறை என்பவற்றை பிரயோகித்தல் மக்கள் அள்ளி வழங்கிய 67 ரூபாய் என்று பெரும் நிதியை வைத்து தாராளமாக வரவு செலவு திட்டமிட்டு திருப்பணியை நடத்தி முடித்து கோடிக்கணக்கான பணத்தினை மீதப்படுத்தி வங்கியில் இட்டு தொடர்ந்து ஆலயத்தை நடத்தும் வகை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தாமை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்காமல் 67 கோடி ரூபாய் என்ற வரவுக்கும் மேலதிகமாக தனது பணத்தினை போட்டதாக செலவு காட்டுதல் இன்னும் பல மோசமான ஊழல் மிக்க வேலைகளை செய்திருக்கும் இந்த தலைமையும் நிர்வாகத்தையும் அடியோடு மாற்றி அமைக்க பொதுமக்களே நாளைய தினம் அணி திரள்வீர்i இத்தனை ஊழல்களையும் செய்த தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் சார்பாக வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேடிப்பார் இணையதளம்
இஸ்ரேல் - ஈரான் ஏழாம் நாள் போர்: செய்திகளின் சுருக்கம்
இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா இணைவது குறித்
16 ஜூன், 2025
15 ஜூன், 2025
கைவிட்டு போனதா தமிழரசு தலைமை?
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.
நாளை கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவு! [Sunday 2025-06-15 17:00]
![]() கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தை அகற்ற உத்தரவிட்ட தவிசாளர்! [Sunday 2025-06-15 17:00]
![]() அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. |
வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இணக்கப்பாடு! [Sunday 2025-06-15 17:00]
![]() வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று காலை இடம்பெற்றது |
14 ஜூன், 2025
அங்கஜன் பாணியில் கபிலனுக்கும் யாழ் மாவட்டச் செயலகத்தில் அலுவலகம்! [Saturday 2025-06-14 16:00]
![]() யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது |
இருபாலையில் கஞ்சா விற்றவர்களை காட்டிக் கொடுத்தவர் வெட்டிக் கொலை! [Saturday 2025-06-14 16:00]
![]() யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை - மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார் |
கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அறிவிப்பு! [Saturday 2025-06-14 07:00]
![]() ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. |
5 ஜூன், 2025
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 13 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Thursday 2025-06-05 16:00]
![]() யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. |
சித்தார்த்தன், சிவிகேயுடன் விரைவில் சந்திப்பு! [Thursday 2025-06-05 06:00]
![]() சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் |
நீதி அமைச்சர், குரங்கு அமைச்சரை சிறைக்கு அனுப்புவேன்! [Thursday 2025-06-05 06:00] நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள் 'ஜம்பர்' (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
![]() நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள் 'ஜம்பர்' (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் |
அரச செயலகங்கள், பொது இடங்களில் முககவசம் அணிய உத்தரவு! [Thursday 2025-06-05 06:00]
![]() நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. |
மதுபான உரிமங்கள் குறித்த தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு! [Thursday 2025-06-05 06:00]
![]() முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கலால் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) அனுமதி அளித்துள்ளது |
3 ஜூன், 2025
பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிப்பு - பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு! [Tuesday 2025-06-03 05:00]
![]() முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனா |
மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற கணவன்! Top News [Tuesday 2025-06-03 16:00]
![]() வவுனியா புளியங்குளம் பகுதியில் தனது மனைவியை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்ற கணவன், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் |
2 ஜூன், 2025
இம்மாத இறுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்! [Sunday 2025-06-01 15:00]
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் |
35இற்கும் அதிக சபைகளில் தமிழரசு ஆட்சியமைக்கும்! [Sunday 2025-06-01 15:00]
![]() வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
பிமல் ரத்நாயக்கவை பிரதமராக்க ஜேவிபி முயற்சி! [Sunday 2025-06-01 15:00]
![]() அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் |