16 Player(s)
















16 Player(s)

Sageepan T

Abeshek J

Agnishan L

Annointin A

Baveeth N

Dinesh J

Jasinthan V

Jeniban S

John N

Neirojh N

Niroj P

Nishath S

Pageesh S

Praschin M

Sharvin S

Thuvarakan (Jesy) T
![]() பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். |
![]() அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் 11 மில்லியன் டொலர் முழுமையான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் |
![]() பாஜகவில் இருந்து விலகும் முடிவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார். இன்று பாஜக மேலிட தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த விஷயத்தை அண்ணாமலை தெரிவித்தார். அதோடு தமிழக பாஜகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். இதையடுத்து உடனடியாக டெல்லி வரும்படி நயினார் நாகேந்திரனுக்கு மேலிடம் அதிரடி உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை |
![]() யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்தச் சில தரப்பினர் முயற்சிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டர்ஸ் "பங்களா முன்பாக இன்று ஆறாவது வெள்ளிக்கிழமையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர் |
![]() கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பஸ்வர குணரத்ன உள்ளிட்ட பலரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. |
![]() அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலில் பந்தர் அப்பாஸ் நகரில் அமைந்துள்ள ஈரானின் தரைக்கட்டுப்பாடு மையம் தான் முதன்மை இலக்காக இருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் பகிர்ந்துள்ளார். |
![]() பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
புதிதாக தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளார். தவெகவில் புதிதாக இணைபவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம் என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், தவெகவினர் புதியவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளதோடு, அக்கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். |
அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவ்ர்கள் பழைய பொறுப்புகளை கொண்டு விளம்பரப்படுத்தி கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக எஸ்பி வேலுமணி, அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படாது என்பதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. |
![]() தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். |
![]() கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். "இந்த ஆட்சியில் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு நகர்வும் இருக்காது. திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நானே இறுதி முடிவெடுப்பேன். என்னை மீறி யாரும் இங்கே அதிகாரத்தைச் செலுத்த முடியாது" என்று அவர் கூறியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் மட்டுமே பவர் சென்டர் என்ற தொனியில் ஆட்சி தொடங்கப்பட்ட நாளில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரக்கப் பேசினார். |
![]() அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார். |
![]() தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது |