தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு
யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த மு. நிஷா (வயது 17) என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.