புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

வங்கியில் பணமெடுக்கச் சென்ற இளம்பெண்ணைக் காணவில்லை
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
செட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி (21வயது) என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.
குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை மீள எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் வீடு வந்துசேரவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ad

ad