தொலைபேசியில் பேசியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை
கோபி உள்ளிட்ட மூன்று பேரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோபி உள்ளிட்ட மூன்று பேரின் தொலைபேசி அழைப்புகள் தற்போது பரிசோதனைக்கு உட்டுபத்தப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் அவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்ற விபரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.