புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

நாடு முன்னேற மோடி பிரதமர் ஆகவேண்டும்: அழகிரி திடீர் ஆதரவு? -
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தன் ஆதரவாளர்களுக்கு அழகிரி ரகசிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் இருந்து
நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, அவரது ஆதரவாளர்களுடன் மதுரை தயா மஹாலில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அக்கூட்டத்தில் அழகிரி பேசியதாவது, எந்த தவறும் செய்யாத, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகத்தை கலைத்தனர். இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன், ஆனால் என் மீது பழியை மட்டும் தான் சுமத்தினர். நாம் 'கட்சியையும், கட்சி தலைவரையும் மீட்டெடுப்போம்' என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம். உங்கள் எல்லோரிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டதன் அடிப்படையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை ஆதரிப்போம். கடந்த லோக்சபா தேர்தலில் நம் ஆதரவால் தான், திமுக தென் மண்டலத்தில் 9 எம்.பி க்கள் வெற்றி பெற்றனர். குஜராத் மாநிலத்தில், சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் மோடி, பிரதமரானால், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்று அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராம், அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும், விரைவில் அழகிரி- மோடி சந்திப்பு நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad