![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது |
-
20 ஜூன், 2024
மைத்திரிக்கு மீண்டும் தடை
சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு!
![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றது. இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழைக்கு வாய்ப்பு
![]() எதிர்வரும் 22ஆம் திகதி வரை வடமாகாணத்தில் கனமழையுடனான காலநிலை நிலவும் என்று வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். |
அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராகிறார் மஹிந்த
![]() பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலுக்கு விடைகொடுக்கத் தயாராவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
நீதி, பொறுப்புக்கூறலை ஆதரிக்கிறது கன்சர்வேட்டிவ் கட்சி! - டேவிட் கமரூன்
![]() பிரித்தானிய தமிழர்களிற்கான கன்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதியானது தளர்ச்சியற்றது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். |
19 ஜூன், 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் அப்படியே பாமகவுக்கு மடை மாறுமா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி
ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
ஜனாதிபதியின் சூழ்ச்சியை முறியடித்து விட்டது அரசியலமைப்பு பேரவை!
![]() சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரத்தினத்தை பிரதம நீதியரசராக நியமித்து தனக்கு ஏற்றாற் போல் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியை அரசியலமைப்பு பேரவை தோற்கடித்து விட்டதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார் |
அரசை விட்டு வெளியேறுமாறு விஜயதாசவுக்கு ஜனாதிபதி அழுத்தம்!
![]() அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். |
அரசுக்கு ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு இலஞ்சம்
![]() பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்கு சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார் |
நாளை மாலை தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்
![]() நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் |
நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடுவது தவறான முன்னுதாரணம்!
![]() நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே ரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார் |
நீதிமன்றத்திற்கே சவால் விடுகிறார் ஜனாதிபதி
![]() ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார் |
உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது - ஜனாதிபதி ரணில் அறிவிப்பு.
![]() பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. எனவே அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |
18 ஜூன், 2024
சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜெய்சங்கர்
![]() இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார் |
திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினிக்கு குவியும் வாழ்த்து!
![]() உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் |
17 ஜூன், 2024
துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை
![]() மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!
![]() 12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது |
தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க கிளிநொச்சி மாவட்ட அமைப்புக்கள் ஆதரவு
![]() எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. |
சுவிட்சர்லாந்தயுக்ரேன் அமைதி மாநாட்டின் முன்மொழிவில் கையெழுத்திடாத இந்தியா - என்ன நடந்தது
வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்
![]() இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
16 ஜூன், 2024
மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்! [
![]() ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார். |
அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!
![]() இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. |
14 ஜூன், 2024
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் இருந்து விழுந்து மகள் பலி
![]() தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது |
13 ஜூன், 2024
காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம்!- என்கிறது சஜித் அணி.
![]() யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கபடவில்லை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். |
அடுத்த சில வாரங்களில் 15 முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் திட்டம்!
![]() எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார் |
புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு - முன்னாள் சுங்க அதிகாரி விடுதலை!
![]() விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் |
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடு குறித்து ஆராய விசாரணைக்குழு நியமனம்!
![]() 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார் |
சித்தார்த்தனுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்த ஜேவிபி முடிவு
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் சித்தார்த்தன் எம்.பியின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது |
4 ஜூன், 2024
15 அமைப்புகள், 210 பேரின் சொத்துக்கள், நிதிகளை முடக்கியது அரசாங்கம்!
![]() இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். |
காஸா சமாதான திட்டத்திற்கு சுவிஸ் அரசு ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வைத்துள்ள காஸா சமாதான திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவினை வெளியிட்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியன தொடர்பில் பைடன் யோசனைத் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளார்.
மூன்று கட்டங்களாக சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமாதான முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
31 மே, 2024
கட்டலோனியா பிரிவினைவாதிகளுக்கான பொது மன்னிப்பு: ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல்!!
2017 ஆம் ஆண்டு சட்டவிரோதமான மற்றும் தோல்வியுற்ற
மீள நிகழாமையை உறுதிப்படுத்த உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டும்!
![]() இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் மற்றும் மீறல்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படுவதும், பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதும் இன்றியமையாததாகும் என ' போர் தவிர்ப்பு வலயம் ' ஆவணப்படத்தின் இயங்குநர் கல்லம் மக்ரே வலியுறுத்தியுள்ளார். |
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது பதவியை நீடிக்க வேண்டும்! - ஐதேக புது நிபந்தனை.
![]() நாட்டை அபிவிருத்தி செய்து கொண்டு முன்னெடுத்துச்செல்ல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் அல்லது தேர்தலை ஒத்திவைத்து இன்னும் சிறிது காலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். |
இலங்கையர்கள் தாய்லாந்தில் விசா இன்றி நுழையலாம்!
![]() இலங்கை உட்பட 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 60 நாட்கள் வரையில் அங்கு தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் |
30 மே, 2024
இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது!
![]() பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது |
கிளிநொச்சியில் ஐஸ் வியாபாரி வீட்டில் பதுங்கியிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது!
![]() கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
ஜெனீவாவின் பிரேரணையால் சிக்கலில் இலங்கை இராணுவம் : அச்சம் வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை
28 மே, 2024
சாவகச்சேரியில் விபத்து - 4பேர் காயம்!
![]() யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. |
ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு
![]() ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது |
மல்லாகம் யாழ்ப்பாணத்தில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்
24 மே, 2024
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு
![]() நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர். |
கடற்கொந்தளிப்பினால் நெடுந்தீவு படகுச் சேவை ரத்து!
![]() கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்று 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஒன்ராறியோவின் போக்குவரத்து 'ஒற்றைக் கட்டணத்' திட்டத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்!
ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது |
ருஹுணு குமாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி
![]() கிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
இலங்கையின் காரீயச் சுரங்கங்களை குறிவைக்கும் இந்தியா
![]() இலங்கையில் உள்ள காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
பொறுப்புக்கூறலுக்கான ஆணையை ஐ.நா மனிதஉரிமை பேரவை புதுப்பிக்க வேண்டும்!
![]() இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்து வைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது |
23 மே, 2024
தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதில்லை என தமிழரசு முவு!
![]() ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். |
உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை!
![]() உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்படுமென ரஷ்யா அறிவித்துள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் இறையாண்மையை காக்க உக்ரேன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்தா |
21 மே, 2024
சரணடைந்த குழந்தைகள் எங்கே? - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி6:00]
![]() இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார் |
17 மே, 2024
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்!
![]() முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் |
மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
![]() கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன |
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
![]() முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் |
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது |
இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
![]() இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்!
![]() தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார். |
அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி! - பாதுகாப்பு தீவிரம்.
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது |