ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ'திரைப்படத்தில் திரு நங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.'ஐ'படத்தில் திருநங்கை களுக்கு எதிராக காட்சி களை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் நுங்கம் பாக்கம் சாஸ்திரிபவன் வளாகத்தில் மத்திய தணிக்கை துறை அலுவலகம் முன்பு திருநங்கைகள் இன்று திரண்டனர். இதில் திருநங்கையும் நடிகையுமான ரோஸ், பானு, டாக்டர் செல்வி உள்பட 15 «பபேர் குவிந்தனர். அவர் கள் 'ஐ'படத்துக்கு எதிராக வும் திருநங்கைகளை இழிவு படுத்தும் காட்சிக்கு அனுமதி கொடுத்த தணிக்கை துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் திருநங்கைகள் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை சந்தித்து மனு அளித்தனர்.