புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

தாயகம் திரும்பும் அகதிகளுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்: சந்திரஹாசன்


இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகத்துக்கு திரும்ப உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.சி.சந்திரஹாசன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மாவுக்கும் இலங்கையின் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சின் போது அகதிகள் விடயமும் ஆராயப்பட்டது.
இதனை வரவேற்றுள்ள சந்திரஹாசன், தாயகம் திரும்புவோருக்கு காணி மற்றும் 3 மாத முதல் 6 மாதங்களுக்கான வாழ்வதார உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டும் என்று சந்திரஹாசன் கோரியுள்ளார்.

ad

ad