-

7 அக்., 2025

அன்னபூரணி அம்மாளின் கப்பல் அமெரிக்கப்பயணம் - 1938

www.pungudutivuswiss.com
வல்வெட்டித்துறையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று
அமெரிக்காவுக்கு வல்வெட்டித்துறை தமிழர்கள் கொண்டு சென்றார்கள்
என்றால் நம்பமுடிகிறதா...?
கோடிக்கணக்கில் உருவான
டைடானிக்கே பாதித்தூரத்தில்
மூழ்கியதென்றால்
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி அமெரிக்கா
சென்றதென்றால் தமிழனின் சாதனை






எத்தகையது.
அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938
வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில் சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளூர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.
அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும், அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவியின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும் பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று "இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து -> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக -> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது" உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையுமாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பிள்ளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்குவரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும் “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள் கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறைமுகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர் நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.
அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine Barrows என்பவரால் விவரிக்கப்பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்களின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.
“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக்கதை. இத்தகைய கப்பல்கள் வல்வெட்டித்துறையிலும் அதனை அடுத்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும் வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும் வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”
அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.
அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டது.
அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம் தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.
பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம் சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.
இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும் சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமைமிக்க ஒரு அடையாளமாகும்.
அமெரிக்க மற்றும் ஸ்ரீ லங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும் பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்பத்திறனும் அறிவியல்நுட்பங்களும் விருத்தியடைந்திராத காலத்தில் உள்ளூர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா, காக்கிநாடா, தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் வல்வெட்டித்துறை தமிழர்கள்.

ஹிட்லரின் பாதையில் அநுரவின் அரசாங்கம்:ரணில் கடும் குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com

6 அக்., 2025

www.pungudutivuswiss.com
◉◉ விசேட செய்தி :பதவி விலகினார் பிரதமர் Sébastien Lecornu!!

 பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்தார்.

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

    

காணி உறுதி மோசடி- பெண் சட்டத்தரணி கைது! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

"விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்" - நக்கீரன் கோபால்! [Sunday 2025-10-05 18:00]

www.pungudutivuswiss.com

தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி.

அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா Posted by By tamil

www.pungudutivuswiss.com
அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ

சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை

www.pungudutivuswiss.com

கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - பயணிகளுக்கு சிக்கல்

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி:11.37 பில்லியன் - பாதுகாப்பு அமைச்சு 455 பில்லியன்?

www.pungudutivuswiss.com


ஜனாதிபதிக்கான செலவீனமாக  ரூபா 11.37 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

குமரப்பா -புலேந்திரன் நினைவுத்தூபியை இடித்தழித்தவர் நகரசபையுடன் முரண்பாடு! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை.

சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை

அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு  கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது

ரணிலை விட அனுரவுக்கான ஒதுக்கீடு 72 வீதம் அதிகம்! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜெனிவா வரைவில் மீண்டும் இனமோதல்- வாக்கெடுப்பை கோராது இலங்கை! [Sunday 2025-10-05 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால்

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 பொய்யான     செய்திகளை   எழுதி மக்களை  ஏமாற்றி வயிறு  வளர்க்கும்  லங்காசிறி தமிழ்வின் குழுமத்தின்   இன்னுமொரு பித்தாலாட்டிடம் 
சரிகமப  நிகழ்ச்சியில் இந்த  வாரம் டாப் ஐந்துக்கு  சுசந்திகா  ஆனால் தமிழ் வின்  கீழே  பொய்யான  செய்தியை போட்டு ஏமாற்று உள்ளது 

சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் ஈழத்தமிழன்... நடுவர்களே உறைந்துபோன தருணம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9!! வீட்டிற்குள் வருகை தந்த போட்டியாளர்கள்.

www.pungudutivuswiss.com.

உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

www.pungudutivuswiss.com
உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு ! Posted by By user

www.pungudutivuswiss.com
5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு !

புஷி -ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Of

5 அக்., 2025

www.pungudutivuswiss.comஆனந்தவிகடனில் வெளிவந்த இலங்கையின் மனித புதைகுழிகள் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான ஓவியத்தை வரைந்துள்ளார் ஆனந்தவிகடன் ஓவியர் ஹா சிப்கான்.

செலவைக் குறைக்க சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்! [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் மழை - 3 குடும்பங்கள் பாதிப்பு! [Sunday 2025-10-05 06:00]

www.pungudutivuswiss.com


காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

நல்லூரில் பெருந்தொகை வெளிநாட்டு நாணயம், நகைகள் கொள்ளை- பிரதான சந்தேக நபர் கைது! [Sunday 2025-10-05 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பஸ் மீது லொறி மோதி

லிதுவேனியாவின் வில்னியஸ் விமான நிலையத்தில் வான்வழிச் விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்

www.pungudutivuswiss.com
லிதுவேனியா தலைநகர் வில்னியஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிச் சேவை, அதன் வான்வெளியில் பலூன்கள் பறக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.

இதனால், வில்னியஸை நோக்கிய பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “கவனம்: வில்னியஸ் விமான 

www.pungudutivuswiss.com

15 October இல் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் கட்டாயமாக WWW.ETA.GOV.LK இணையதளத்தில் விசா எடுத்து வரவேண்டும். விசா இல்லாதவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்

"41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான்" - வைரமுத்து பதிவு! [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. களை எக்ஸ்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவை கரூர் துயரம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா? [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.

கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது

உக்ரைன் சுமி ரயில் நிலையத்தில் ரஷ்யாவின் கொடூர தாக்குதல்

www.pungudutivuswiss.com

உக்ரைனின் வடக்கு பிராந்தியமான சுமியில் (Sumy) உள்ள 
ஷோஸ்ட்கா (Shostka) ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை 
குறிவைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் (Drone Strike) ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.

தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், விஜய்க்கு இலங்கைத் தமிழர்கள் கடும் எச்சரிக்கை! – “அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம்!”

www.pungudutivuswiss.com
கச்சத்தீவு விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காகப்
 பயன்படுத்தினால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ்- டிரம்ப் கூறியது என்ன?

www.pungudutivuswiss.com?

லண்டனில் பாலஸ்தீன குழுவின் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது!

www.pungudutivuswiss.com
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு 
ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை

மகிந்தவின் குண்டு துளைக்காத கார் மீள கையளிப்பு

www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயணக் கைதிகளை விடுவிக்கவும் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையவும் தயாராகிறது ஹமாஸ்

www.pungudutivuswiss.com


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதித்
 திட்டத்தின் சில கூறுகளை ஏற்றுக்கொண்டதாகவும் , இறந்த அல்லது

ஜநாவிலும் அரை அவியல்!

www.pungudutivuswiss.com


அரை அவியல் அரசியலில் கல்லா கட்டிவரும் இராமநாதன் அர்ச்சுனா ஐக்கிய 

நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக

 பயணித்துள்ளாராம்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(04) ஜெனீவா நோக்கி 

புறப்பட்டுள்ளதாக தனது யூரியுப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியாக சிறீதரன் ஜெனிவாவுக்கு :சி.வீ.கே.சிவஞானம்!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் 

அறிக்கை எரித்தது தவறு என குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் 

4 அக்., 2025

www.pungudutivuswiss.com
♦இலங்கையில் உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதலோடு நேரடியாக தொடர்புபட்டுள்ளார் பிள்ளையான் என்கின்ற சிவனேசன் சந்திரகாந்தன் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
♦ இந்த பிள்ளையான் என்கின்ற நபர் மீது குழந்தைகளை கப்பம் கேட்டு கடத்திக் கொலை செய்த கொடூர வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றது.
♦2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இந்த குண்டு தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
♦கோத்தபாய ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் முகமாகவும், முஸ்லிம் மக்கள் மீது பழியை போட்டு அவர்கள் மீது ஏனைய சமூகத்தவர்களை வெறுப்பேற்றவும் இந்த குண்டு தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நீர்நிலைகளில் எக்கச்சக்கமான பூச்சிக்கொல்லிகள்- ஆய்வில் கண்டுபிடிப்பு

www.pungudutivuswiss.com
சுவிஸ் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐந்து நீரோடைகளில்

விடுவிக்கப்பட்ட ரஷ்யக் கப்பல்

www.pungudutivuswiss.com

பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.

13ஐ கேட்பதில் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம்! [Saturday 2025-10-04 15:00]

www.pungudutivuswiss.com


13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்பதிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தவிர  மற்றவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்பதிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! [Saturday 2025-10-04 15:00]

www.pungudutivuswiss.com


பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது

வயிற்றுக்குள் உடைந்த கோகைன் பொட்டலம்: துபாயில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.

ஒன்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது

அனைத்து பிணைக் கைதிகளையும் ஒப்படைக்க தயார்: டிரம்ப் ஒப்பந்தத்திற்கு பதிலளித்தது ஹமாஸ்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது

“2 மடங்கு தண்டனை தர வேண்டும்” - ராமதாஸ் ஆவேசம்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு,  மகளை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு, மகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும்

த.வெ.கவை காட்டமாக விமர்சித்த நீதிபதி: ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த சிக்கல்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

WI எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி!

www.pungudutivuswiss.com
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் 
மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் முடிவுகளில் இருந்து ‘ஓடி ஒளிய முடியாது

www.pungudutivuswiss.com
மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர்  முடிவுகளில் இருந்து ‘ஓடி ஒளிய முடியாது’

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் ரூபன் அ

ட்ரோன்களால் மியூனிக் விமான நிலையம் மூடல்: ‘சுட்டு வீழ்த்த அதிகாரம் கொடுங்கள்’ : பிரதமர்

www.pungudutivuswiss.com
ட்ரோன்களால் மியூனிக் விமான நிலையம் மூடல்: ‘சுட்டு வீழ்த்த அதிகாரம் கொடுங்கள்’ : பிரதமர்

பிக் பாஸ் 9ல் நுழைந்த ரட்சகன் இயக்குனர்.. கசிந்த போட்டியாளர்கள் லிஸ்ட்

www.pungudutivuswiss.com

விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகும் விஜயின் சிசிடிவி காட்சிகள்

www.pungudutivuswiss.com
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தின் போது இடம்பெற்ற துயரசம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்னை

மாடியில் இருந்து குதித்த மாணவி படுகாயம்! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார்

தினமும் புதிதாகப் பதிவாகும் 100 புற்று நோயாளிகள்! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

ரணிலின் பொறிக்குள் அனுர அரசு! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற  பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின்  கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

பேசாலை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் அடித்துக் கொலை? [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com

போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ad

ad