புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் 
வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. .
 
கடந்த 17 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட  விவாதத்தை அடுத்து ஐந்து அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பாக வாதிப்பிரதிவாதங்களை அடுத்து இன்று மாலை 6மணியளவில் எதிர்க்கட்சியினரின் பூரண ஆதரவுடனும்,ஆளுங்கட்சி உறுப்பினர் இருவரின்  நடுநிலமையுடனும் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
 
இதேவேளை ஆளுநர் செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி  இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் குறித்த செயலகத்திற்கு நிதி ஒதுக்கிடுவது தொடர்பில் வாக்கெடுப்பினை நடாத்துமாறு சிவாஜிலிங்கம் அவைத்தலைவரிடம் கோரிய போது அனந்தி அதனை வழிமொழிந்தார்.
 
இந்த நிலையில் கோரிக்கையினை ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் வாக்கெடுப்பு நடாத்த முடியாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்தமையால் அவர்கள் இருவரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில்; நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தனர்.
 
மேலும் 2015 ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad