புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

இலங்கையை முன்னேற்றிச் செல்ல வடக்கு மக்களே ஒத்துழையுங்கள் முள்ளியவளையில் மகிந்த உரை
இலங்கையில் முப்பதாண்டுகால இருண்ட யுகத்திற்கு முடிவுகட்டி, அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், நாடு பின்னோக்கிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும் மேலும் வளம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கி இலங்கை முன்னேறிச் செல்வதற்கு வடபகுதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு முள்ளியவளையில் நடைபெற்ற  ஜனாதிபதி தேர்தலுக்கான வடமாகாணத்திற்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய ஆளும் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனவாதம் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனவாத அரசியல் மிக மிக மோசம் என்றும் எமக்குத் தேவை சகோதர பாசம் என்றும் தெரிவித் துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டுகள் யுத்தம் நடைபெற்றது. ஆனால் ஐந்து ஆண்டுகளாகவே அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகிறது.

இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் வடகுதிக்கு பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டுள் ளது. பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், சாலை அபிவிருத்தி என பல துறைகளிலும் இன்று வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

யுத்த காலத்தைப் போலல்லா மல், இப்போது யாரும் நாட்டின் எந்தப்பகுதிக்கும் சென்று வரலாம்.

உயிர்ப் பாதுகாப்பு குறித்து அச்சமடையத் தேவையில்லை. இருபத்தேழு ஆண்டுகளின் பின்னர் வட மாகாணத்தில் ஒரு மாகாண அரசுக்கான தேர்தலை தாங்களே நடத்தி னோம். வடமாகாண சபைக்கென பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கடந்து போன இருண்ட யுகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது. குரோதம் நிறைந்த அந்தக் காலத்தை மறந்து, எல்லா மத மக்களும், எல்லா இன மக் களும், நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.

ஒருவர் மற்றவர்களுடைய கலாசாரத்தை மதத்தை மதித்து வாழ வேண்டும். அதற்காக எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என மகிந்த கேட்டுக்கொண்டார்.

முள்ளியவளையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தகாலத்தின்போது இழந்திருந்த காணிகளையும் விடுதலைப்புலிகளின் வங்கிகளில் அடகு வைத்திருந்த தங்க நகைகளையும் தமது அரசு மக்களுக்கு மீண்டும் திருப்பிக் கொடுத்ததைப் போன்று வடபகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

வடமாகாண சபையின் ஊடாக வடபகுதி மக்கள் நன்மையடைய வேண்டும் என்றும், அதற்கு பெருமளவு நிதியைத் தாங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அவற்றின் மூலமான நன்மைகள் வடபகுதி மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முள்ளியவளை மற்றும் கிளி நொச்சி தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர், அமைச்சர் பிரபா கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம், கிளிநொச்சி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய ஸ்தர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்
டனர்.     

ad

ad