ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது
கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.
யாழ்ப்பாணம் - பொன்னாலை கிராமத்தில், 170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தவம் கிடந்தபோதும் சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை
திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில்
பிரித்தானியாவில் சிலர் தேவையில்லாமல் வெளியே செல்வதன் மூலம் ஊரடங்கு சட்டங்களை மீறுகிறார்கள் என்பது நம்பமுடியாதது என்று நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
தாயக தமிழர்களே சிந்தியுங்கள் .செயல்படுங்கள் .பலமான அத்திவாரமொன்றை இப்பொழுதே இடுங்கள்
------------------------------------------------------------------------------------
கொரோனாவின் தாக்கம் இன்னும் 2-3 மாதங்களில் முடிவடையலாம் .இருந்தாலும் அதனால் உண்டாகப்போகும் பொருளாதார வீழ்ச்சி ,மீண்டும் கட்டியெழுப்பும் திறன் கேள்விக்குறியாகவே பலம் வாய்ந்த மேற்கத்தைய நாடுகளில் காணப்படுகின்றது . பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது 10 வருடங்களாகும் . அத்தோடு இதட்கான சீர்திருத்த திட்ட்ங்கள் பல புதிதாக முன்னெடுக்கும் பட்ஷத்தில் சடட நடைமுறைகள் மாற்றப்படலாம் . ஓய்வொஓதியம் வேலையற்றோருக்கான கொடுப்பனவு சமூக சேவை கொடுப்பனவு என பலவற்றில்கை வைக்கும் நிலை உண்டாகும் . வளர்ச்சியடைந்த உலகின் முதலீடாது நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இலங்கை போன்ற நாடுகளின் கதி கஸ்டமானது
புலம்பெயர் தமிழர்களில் தாயகம் விட்டு வந்து குடியேறிய முதல் தலைமுறை 60 வயதுகளின் ஆரம்பத்துக்கு வந்துவிடடார்கள் . அதாவது ஒய்வு பெறு ம் காலத்துக்குள் பிரவேசிப்பதால் அவர்களின் வருமானம் குறைவடையும் . புலம்பெயர் தமிழரிடையேயும் வேலை இழப்புக்கள் சம்பளக்குறைப்பு ஒய்வு நிலை போன்ற காரணிகளால் பொருளாதார வளம் குறையும்.ஆதலால் புலம்பெயர் தமிழரின் பொருள்வளம் தாயகம் நோக்கி நகர்வது பெரிதாக குறைவடையும் .
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழரின் பொருளாதார அத்திவாரம் புலம்பெயர் தமிழரையே நேரடியாகவோ மறைமுகமாகவோ தாங்கி நிக்கிறது இலங்கை பொருளாதாரம் கூட அப்படி தான் பெரும்பாலும்
புலம்பெயர் தமிழரின் ஆதரவு குறையுமிடத்து தாயகத்தமிழரிடையே வேலையின்மை பட்டினிச்சாவு வறுமை தாண்டவம் தாராளமாக . தாயக உறவுகளே இப்போதிருந்தே அத்திவாரமிடுங்கள் . சுயதொழில் ,விவசாயம் மீன்பிடி கால்நடைவளர்ப்பு அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என உங்களை நாட்டிடம் கொள்ள வைத்து முயட்சி எடுத்து உங்கள் வாழ்வை வளம்பெற அத்திவாரமிடுங்கள்
பொழுதுபோக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் தரும் சோம்பேறி வாழ்வை உதறி உங்களை நீங்களே மாற்றிக்கொளுந்தங்கள் நல்ல கல்வி வாய்ப்பு உள்ள இப்போதைய நிலையில் தரமான உயர்கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் புலத்து தமிழறிவும் ஆதரவில் வாழும் பழக்கத்தை அறவே விட்டுத்தள்ளுங்கள் .
ஆடம்பரமான வசதியான செலவழித்து வாழும் வாழ்வை விட்டு புரட்சி செய்யுங்கள்
சேமிக்க பழகி கொள்ளுங்கள் அன்றாடம் உழைப்பதை சேமிக்க பழகுங்கள்
அரசாங்கத்தின் வீட்டுவசதி சமுர்த்தி வசதி வங்கிகளின் கடன் வசதி என்பவற்றை உண்மையான முன்னேற்றத்துக்கு பயணப்படுத்துங்கள் நுண்கடன் போன்ற சீரழிக்கும் திட்ட்ங்களுக்கு நுழைந்து விடா தீர்கள்
முக்கியமாக மதுப்பழக்கம் போதைவஸ்து பாவனை கலாசார சீரழிவுகளை அறவே கைவிடுங்கள் . திருமண பந்தத்தை எமது கலாசார, மத வழிகாட்டல்கள் அடிப்படையில் நல்லறமாக கொண்டு நடத்துங்கள்
இந்த கட்டுரையை பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நெஞ்சிலே நிறுத்தி வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இதனை படித்ததில் பலனை அடைவதை உணர்வீர்கள் .
சுவிஸில் கொரோனா தோற்று வரைபு இப்போது இறங்குவரிசைக்கு செல்கிறதா ? கொரோனா தோற்று பரவ ஆரம்பித்து 2-3 வாரங்களின் பின்னர் ஒரு உச்சகட்த்தை அடைந்து பின்னர் குறைந்து செல்லும் என்ற கணிப்பில் சுவிஸின் வரைபு அந்த வித நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக
கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியே இந்த 6,000 பேரை இவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்
நாட்டில் காணப்படும் அச்சுறத்தலான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் சங்கம் ஓர் தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது
அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் இந்தியப்பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு க்ரோங்கோளே மருந்து மாத்திரைகளை அதிக அளவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்
புங்குடுதீவில் பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கமும் பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் இணைந்த 28லட்டசம் ரூபாய் பெறுமதியான மாபெரும்நிவாரணப்பணி 28லட்டசம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்களை புங்குடுதீவில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் உயிர்நேயப்பணியில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் இடர்கால உதவிக்குழுவினருடன்இணைந்து பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் யாரும் எதிர்பாராத புங்குடுதீவு மக்களை நன்றிக்கரம் கூப்ப
போராட்டகாலம் சுனாமி போன்ற இயறகை அனர்த்தவேளையிலும் கைகொடுத்த புலம்பெயர் தமிழர் இப்போதும் தாயக உறவுகளை காத்து வருவதில் முன்னிற்கின்றனர் ,பாராட்டுக்கள்
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் சென்டெனிஸ் இல் கொரோனா தாக்கத்தின் உச்சம்
பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியான (93) சென்டெனிஸ் நகர் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் கட்டுப்பாடடை கடைபிடிக்காததாலேயே இந்த உச்சகடட பாதிப்பு நிலை வந்துள்ளது இங்கும் தமிழ்மக்கள் அதிக அளவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது
கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடா- ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின்
யாழ் அரச அதிபரின் அறிவிப்பு
-------------------------------------------------
சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம் மற்றும் கடன் சம்பந்தமான முறைகேடுகள் இருப்பின் உடனே அறிவிக்கலாம் . சமுர்த்தி உத்தியோகத்தர் யாராவது சரியாக செயல்படாமை, தவறான வார்த்தை பிரயோகம், கண்ணியமில்லாமை ,நிவாரணம் வழங்க மறுத்தல் போன்ற செயலில் ஈடுபட்டாலும் அறிவிக்கலாம். இது போன்ற செயல்படட மருதங்கேணி உத்தியோகத்தர் மாற்றம் பெற்றுள்ளார் அதோடு அவர் மீது விசாரணையும் எடுக்கப்பட்டுள்ளது
சர்வோதயத்தினர் புங்குடுதீவில் ஆங்காங்கே சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோருக்கு மட்டும் நிவாரணம் வழங்கினர்
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2 கிலோ சீனி 250 கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கினர் அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம் வழங்கப்பட்ட்து
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சுவிஸ் கொரோனா நிலைமை
-----------------------------------------------
நோய் தோற்று வரைபின் படி கடந்த 21ஆம் திகதி 1947 பேருக்கு தொற்று வந்துள்ளது அதியுச்ச எண்ணிக்கை இதுவென்றும் தெரிகிறது தொடர்ந்து குறைவது போல காணப்பட்ட்து ஆனாலும் மீண்டும் சற்று கூடி உள்ளது கடந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை இப்படி அமைகிறது .மார்ச் 22 -901 , 23 -1046, 24-1609, 25-1079,26-989, 27-1466. 28- 981 29-775,30-963 31-683, ஏப்ரில் 01- 1163,01-1059,03-879,04-783.
இதுவரை 1 லட்ஷத்துக்கும் மேல்பட்டொருக்கு சோதனை நடந்துள்ளது
.அதில் 20 540 பேருக்கு கொரோனா தொற்று கண்டிருக்கிறது .
சுமார் 540 பேர் முற்றிலும் குணமாகி உள்ளனர்
இறப்பு எண்ணிக்கை 643 ஆகி உள்ளது
ஆரம்பத்தில் டெஸ்ஸின் ஜெனீவா வோ வாலிஸ் மாநிலங்களில் அதிக பாதிப்பு .இருந்தது .பின்னர் அது சூரிச் பெர்ன் பிரிபோர்க் பாசெல் மாநிலங்களுக்கும் கூடி உள்ளது 31 வயது முதல் 83 வயது வரை தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்
இறந்தவர்களில் 64 வீதமானோர் ஆண்கள், .தொற்றுக்குள்ளாவோரிலும் ஆண்களே அதிகம்
இறந்தவர்களில் 94 வீதமானோர் (சக்கரை வியாதி ,நுரையீரல் பாதிப்பு ,இதயம் சம்பந்தமானவை போன்ற )முன்னரே எதாவது ஒரு நோயுள்ளவர்களாகவே இருந்துள்ளனர்
டொச் மொழி மாநிலங்களில் அரசின் அவசரகால விதிகளை கூடுதலானோர் கடைபிடிக்கின்றனர்
செங்காளன் மாநிலத்தில் இளம்பராயத்தினர் 5 பேருக்கு மேல் கூடுவது பொழுதுபோக்குவது பொது இடங்களில் கூடுவது என கட்டுப்பாடடை மீறுகின்றனர்
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள
முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்த பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களை திரட்டி கீழக்காணும்
யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது.
கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு
முப்பத்தி மூன்று இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த
பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியில் வசந்தத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பிய எவரும் ஏமாற்றமடைவார்கள். "ஏப்ரல் 20 க்குப் பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புவது மாயையானது" என்று
யாழில் ஒரு மதம் மாற்றுவோரின் கூடடம் டெல்லியில் ஒரு இஸ்லாமிய மாநாடு .இரண்டு நாடுகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதம்
இத்தாலியிலேயே இன்னும் முடிவுக்கு வரவில்லை ,பிரான்ஸ் ஜெர்மனி ஹாலந்து இங்கிலாந்து சுவிஸில் இன்னும் உச்சத்துக்கு வரவில்லை அமெரிக்கா கனடாவில் இப்போது தான் ஆரம்பம் .
வடக்கில் முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில் ஊரடங்கு என்றதும் புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும் மனிதாபிமான ரீதியில் அத்தியாவசிய தே வைகளுக்காக பல வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர் கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள் ஒவ்வொருவராக சென்று பொருட்கள் வாங்கலாம் கிளினிக் செல்லும் நோயாளிகள் சுகாதார அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம் நிவாரணம் வழங்கலாம் .பா உ கல் மற்றும் பல அரிசியலவாதிகள் சமூக சேவையாளர்கள் சமூக சேவை அமைப்புக்கள் நிவாரணங்களை வழங்க அனுமதி உண்டு
இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் - பாதிக்கப்படட 309 பேரில் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பற்றிய 264 பேர் உள்ளனர்
2 ஏப்., 2020
யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு
உங்கள் கிளினிக் அடடையை உங்கள் பகுதி சுகாதார அதிகாரி சென்று உஙக்ளுக்கான மருந்துகளை ப்டேருக்கொண்டு வந்து தருவார் இனி கிளினிக் என்று காரணம் காட்டியும் கூட பயணம் செல்ல முடியாது
நயினாதீவை சேர்ந்த 42 வயது தமிழர் பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால் இறந்துள்ளார்
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா 5000 க்கு மேலே பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும் .ரஷ்ய உதவிகள் போய் கொண்டிருக்கின்றன
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா பாதிப்பு 1 90 000 இத்தாலி பாதிப்பு 1 05 000 ஸ்பெயின் பாதிப்பு 96 000
1 ஏப்., 2020
சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை பாதிப்பு 17 771 இறப்பு 482
பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி ) உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன் வயது 75 பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர் கொரோனாவினால் இன்று உயிரி ழந்துள்ளார் . அவரது வசிப்பிடத்துக்கு கீழே உள்ள கடைக்கு அடிக்கடி சென்று வந்ததினால் கொரோனா தோற்று ஏற்றபடிர்க்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும் இந்த தோற்று பீ டித்துள்ளது
கொரோனா -கடந்த திங்கள் முதல் சுவிஸ் பேர்ண் வாங்டோர்ப் இல் உள்ள BEA மைதானத்தில் அவசர வாகன பரிசோதனைக்கூடம் ஒன்றினை நிறு த்தி சேவை தொடங்கி உள்ளார்கள்
இதை நான் உண்மையாக உதவி கேட்டு எழுதியதாக நினைக்காதீங்க ஒரு அனுபவம் படிப்பினை அதுக்காக எம்மை நாமே உணரவேண்டும் என்று எழு தினேன் . நான் எழுதியபடி இப்படியான பில் கட்டுவது மட்டும் உண்மை பொய்யல்ல . வெளிநாடு என்றால் காசுமாரத்தில் பிடுங்குவது போல சிலர் நினைக்கிறார்கள் . ஆனால் சுவிஸ் அரசு இப்படி சம்பளம் வராது என்றால் எம் சம்பளத்தில் 80 வீதம் கொடுப்பாங்க காப்புறுதி துறை இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள்
பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாமா சுவிஸில் .அண்ணா கனடாவில் , சித்தப்பா பாரிஸில் , அப்பா லண்டலில் ஹலோ என்றால் கிலோ கணக்கில் அனுப்புவாங்க என்பீர்களே ஒரு முறை ஹலோ சொல்லி அவர்களை நலம் விசாரியுங்கள்
ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார் கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி வந்து மக்களோடு மக்களாக பழகி வரும் தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது இன்று கூட அம்மா உணவங்கங்களில் நேரடியாக சென்று உணவுண்டு ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர் இது போன்ற முதல்வர் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள்
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என அலட்சியப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறோம் எம்மை ஆதரித்து வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம் தாயநாட்டு பிரஜைகள்
கடந்த 24 மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து மடிகிறார்கள் என்பது என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள்
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க நலம் விசாரிக்கின்றனர் நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு தாராளமாக பல வகையிலும் உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல் ஒருங்கிணைத்தல் இல்லாமல் சில தவறுகள் அல்லது முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம் சில நாட்களாக என் மனசு கவலையில் ஆழ்ந்துள்ளது , சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால் மறைந்த லோகநாதன் என் மனைவியின் பெரியம்மா மகன் , என் தாய் மாமன் மக்களின் கணவன் . என் மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் . அவரது மரணம் நம்பமுடியாமல் இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக சுவிஸில் வாழ்கிறோம் . இதே நிலையில் இன்னும் 5-6 தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள் புலம்பெயர் தமிழரின் இந்த உயிரா பத்தான இக்கடடான நிலை கண்டு பெரிதாக கண்டுகொள்ளவில்லை ,நலம் விசாரிப்பதில்லை , புலம்பெயர் தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி அவர்களை கூட தாக்கும் என்பது கூட விளங்காமல் தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என் நண்பனும் நல்ல கொ டை வள்ளலுமான இம் போட் தாஸ் ஸ்ரீதாசின் கொடுப்பனவு எனது ஊரில் நடந்து கொண்டிருக்கிறது . இதற்கு மேல் எழுத முடியவில்லை நன்றாக உள்வாங்கி< சிந்திப்போருக்கு பூரண விளக்கம் தானாக உருவாகும் நன்று
தமிழர் வாழும் நாடுகளில் மோசமாகி வரும் நிலையில் உள்ளநாடுகள் இத்தாலி பிரான்ஸ் பிரிட்டன் ஹோலந்து சுவிஸ் இப்போது சுவீடனும் வந்துள்ளது
அலலோயா பிலடெல்பியா ஏசையா தங்களோட இருக்கிறார் சா கமாட்டொம் எண்டுறாங்க நானே மதம் மாறும் யோசனையில் இருக்கிறேன் உயிர் தப்ப
பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
உங்கள் அக்கறை அன்பு இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து ஊர் ஊர் எண்டு உதவினோம் இப்போ நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு பகுதி வீத சம்பளமாவது தர போறாங்க போல .ஆனால் பிரித்தானியா பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு கஷடம் பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து பிழைச்சாங்க இப்போ அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க ஐயா
பிறந்த மதத்தை விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை ஏசையா கொரோனாவால் சாகவிடமாடாராமே ஐயோ அப்பவே மாறி இருக்கலாமே வீணாக அ டம் பிடிச்சு கொண்டு திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல்
நாம் சுவிஸில் வாழ்கிறோம் .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ முடியுமா கொரோனாவால் எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம் வருமானம் இல்லை வீட்டு வாடகை 1700 fr மருத்துவக்கப்புறுதி 1600 fr சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200 fr தொலைபேசி 420 fr மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம் தான் பெரிதாக இல்லை ) சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும் ஆடம்பர செலவுகள் இல்லாமல் உடுப்பு காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே தயவு செய்து ஊரில் இருந்து அனுப்பி உதவினால் நனறாக ருக்கும் உறவுகளே
அவர்களின் கணக்கினை வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும்
31 மார்., 2020
கொழும்பு கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும்
ஐயோ அண்ணா நீங்க சொல்லுறதை நாங்க கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில் அப்பா தீவட்டி பிடிச்சுக்கொண்டு குருவுக்கு உதவி செய்து கொண்டு ஓடி திரிவார் மகளும் தாயும் கோயிலுக்கு வருவாங்க உடம்பில் முக்கால்வாசி தெரியும் மக்களுக்கே அருவருப்பான இருக்கும் எங்க போய் மோத எண்டிருக்கும் விக்கிரகத்தை பாக்கிறதா விக்கிற மாதிரி இருக்கிறத பாக்கிறதா கொல்லுறாங்கன்னே
தமிழர் வாழும் நாடுகள் - இன்று .கொரோனாவால் பாதிப்பும் இறப்பும் இத்தாலி 101739 11591
பிரித்தானியா 22 141 1408
நெதர்லாந்து 11570 864
ஜேர்மனி 63929 561
சுவிஸ் 15760 321
பெல்ஜியம் 11899 513
அமெரிக்கா 1 58 290 2933
கனடா 7297 67
நோர்வே 4436 32
டென்மார்க் 2577 77
சுவீடன் 4028 146
அவுஸ்திரேலியா
இந்தியா 1071 29
சிங்கப்பூர் 879 3
இலங்கை 122 2
நியூசீலாந்து 589 1
:-
:-
30 மார்., 2020
கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள் பொருட்களை நம்பமுடியாத அளவுக்கு லாபம் வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும் பின்கதவாலும் மதில் சுவராலும் வியாபாரம் நன்றாகவே செய்து சம்பாதிக்கிறார்கள் . சமூகநலவாதிகள் தலையிட்டு கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில் சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள் மொத்தமாக யாழ்நகர் சென்று வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த கொள்ளை முதலாளிகளின் செயல் கண்டு எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் . முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி பலமடங்கு விலைக்கு விற்று சம்பாதிக்கிறார்கள்
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1 லட்ஷம் பே ருக்குள் கட்டுப்படுத்தி விடடாலே கெட்டித்தனம் என்கிறார் டொனால்டு ட்ரம்