![]() தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டு உள்ளதாக, சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார் |
-
17 டிச., 2021
எழிலன் உள்ளிட்டோர் குறித்த வழக்கில் பெப்ரவரி 14இல் தீர்ப்பு
அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி!
![]() அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் |
15 டிச., 2021
வல்வெட்டித்துறை செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்
EPDP முதல்வராகத் தொடர்கிறார் மணிவரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!!
நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்
யாழ். நகரபிதாவை வெளியேற்ற எத்தனிக்காதீர்கள்!
![]() யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!
![]() வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார் |
வல்வை நகரசபையில் திடீர் திருப்பம்! - மீண்டும் தவிசாளர் ஆகிறார் செல்வேந்திரா
![]() வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில், இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. |
மணியின் காலை வாருவார்களா? - காப்பாற்றுவார்களா?
![]() யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார் |
13 மூலம் ஒற்றையாட்சியை ஆதரிப்பவர்கள் பச்சைத் துரோகிகள்!
![]() தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
14 டிச., 2021
3இற்கு ஆதரவான ஆளும்தரப்பு கட்சிகளும் அழைக்கப்படும்!
![]() தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள |
வனவளத் திணைக்களத்தின் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது!
![]() மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் |
அராலியில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனாவுக்குப் பலி!
னாவுக்குப் பலி! [Tuesday 2021-12-14 08:00] |
![]() யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
ஜப்னா கிங்ஸ்வெற்றி--பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த ஜப்னா கிங்ஸ்
அரசியல் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
![]() நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன |
மன்னார் கடலில் மூழ்கிய வடமராட்சி மீனவர்கள்! - ஒருவரின் சடலம் மீட்பு. [Monday 2021-12-13 18:00]
![]() மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் இன்றைய தினம் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதான தர்ஷன் என தெரிய வந்துள்ளது |
13 டிச., 2021
32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தபால் ஊழியர்கள்
உக்ரைன் எல்லையில் நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரிப்பு: ரஷ்யாவுக்கு ஜி 7 கூட்டமைப்பு எச்சரிக்கை
இலங்கை வருகிறார் ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா
மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மாயம்
12 டிச., 2021
திரில்லர் வெற்றியினைப் பதிவு செய்த தம்புள்ளை ஜயன்ட்ஸ்
கஞ்சாவுடன் சிக்கினார் பொலிஸ் சார்ஜன்ட்! [Sunday 2021-12-12 07:00]
![]() ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை சார்ஜன்ட் உட்பட இருவர் புளியங்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
13 இற்கு அப்பால் செல்லவே முயற்சிக்கிறோம்!
![]() 13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது,13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
கொழும்பில் இன்று சந்திக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள்!
![]() தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் கொழும்பில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
10 டிச., 2021
கன்னா பின்னா என்று ஓடும் PPT பஸ்: கொழும்பில் இருந்து வந்து விபத்து 1வர் பலி பலர் காயம்
மெஸ்சிகோவில் பாரவூர்தி விபத்து! 54 பேர் பலி
கொலையாளிகள்,திருடர்களுக்கே பொதுமன்னிப்பு..கஜேந்திரகுமார்
ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
தொடங்கியது உண்டியல் முடக்கம்
வசந்த கரன்னகொடவுக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி!
மூழ்கும் கப்பலில் ஏற நான் முட்டாளா?ரணில்
11 நவ., 2021
சுவிஸ் தூதுவரிடம் ஆயர்கள் முறையிட்டது என்ன?
![]() வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர் |
சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி - 60 ஆயிரம் பேர் பாதிப்பு!
![]() நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் |
சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு கொரோனா
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |
மட்டக்களப்பு மாநகர சபையைக் குழப்பும ஆளுநர்!- மேயர், உறுப்பினர்கள் போராட்டம்.
![]() மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்தார். இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர் |
10 நவ., 2021
தமிழ் தேசியம் பேசும் முன்னணி ஈ பி டி பி க்கு ஒத்துழைப்பு
அதிகாரப்பகிர்வு முன்மொழிவுகள் குறித்து கூட்டமைப்பு அமெரிக்காவில் உயர்மட்ட பேச்சு
9 நவ., 2021
சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணத்தில் 40 பேர் பாதிப்பு!
![]() சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது |
வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!
![]() நாட்டிலுள்ள 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது |
8 நவ., 2021
கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! [Monday 2021-11-08 17:00]
![]() கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது |
அருட்தந்தையை கைது செய்ய முயற்சி - நீதிமன்றம் முன் அணிவகுத்த கத்தோலிக்க குருமார்
![]() உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தை வைத்து அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பவடுவதாக குற்றம் சுமத்தி இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது |
கனடாவுக்கான எல்லையை நாளை திறக்கிறது அமெரிக்கா!
![]() கனடாவுக்கான அமெரிக்க எல்லை நாளை திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த எல்லை முதல் முறையாக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
வரவுசெலவுத் திட்டத்துக்குப் பின் அமைச்சரவை மாற்றம்
![]() வரவு செலவுத் திட்டத்தை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்படாத அமைச்சுக்களின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது |
இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
![]() கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது |
7 நவ., 2021
கிரிக்கெட்டி20 உலக கோப்பை : அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்தது தென் ஆப்பிரிக்கா
தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும்!
![]() மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் |
அரசாங்கத்தைச் சாடும் ஆளும்கட்சி எம்.பி.!
![]() அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்களிடம் திட்டு வாங்க நேரிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.இந்துருவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் |
அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி நிராகரிப்பு! [Saturday 2021-11-06 18:00]
![]() நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்ளும் இரண்டு இராஜினாமா கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். எனினும், அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
சம்பந்தனுடன் ஹக்கீம் , மனோ சந்திப்பு!
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடந்தது |
கூட்டமைப்பைச் சந்திக்கிறது சுவிஸ் உயர்மட்டக் குழு!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுவிற்சர்லாந்து உயர்மட்ட தூதுக்குழுவிற்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஆசிய, பசுபிக் உதவிச் செயலாளர், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதர் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர் |
6 நவ., 2021
பிரான்ஸ் வழியாக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி
![]() ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற மற்றொரு புலம்பெயர்ந்தோர் நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களில், பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், இரண்டு புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், ஒருவரைக் காணவில்லை |
0 ஓவர் உலக கோப்பை: ஸ்காட்லாந்தை பந்தாடியது இந்தியாஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது
லடாக் எல்லை விவகாரம்: இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!
![]() இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லை பிரச்னைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது. சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பு வளர்ச்சியுடன் ராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது |
3 நவ., 2021
இணைந்து செயற்படும் அவசியம் உணரப்படுகிறது
![]() தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தா |
சிங்கள குடியேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் முடிவு!
![]() வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன |
இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் முடிவு!
தமிழ் பேசும் கட்சிகள் முடிவு! ![]() [Tuesday 2021-11-02 17:00] |
![]() எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக் கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது |
2 நவ., 2021
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்
நாடகம் போடும் அமைச்சர்கள்!
![]() கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும். |
உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!
![]() வவுனியா நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது |
1 நவ., 2021
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் 250 பேர் பாதிப்பு! - வான்பாயும் நிலையில் கனகாம்பிகை குளம்.
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார் |
வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் நாளை போராட்டம்
![]() விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன |
அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி! - பிரதமர் மஹிந்தவின் விசுவாசிகள் கொந்தளிப்பு.
![]() அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார் |
தமிழ்க் கட்சிகளின் நாளைய கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!
![]() 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை இறுதி செய்யவுள்ளன |
29 அக்., 2021
இத்தாலியில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு
செயலணியில் 3 தமிழர்கள் - ஜனாதிபதி இணக்கம்!
![]() ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் |
மார்க்கம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! [Thursday 2021-10-28 16:00]
![]() மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பட்டன்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. |
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில்
28 அக்., 2021
WelcomeWelcome ஜனாதிபதி கோட்டா, இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
![]() ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. |