புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

உண்மைகளை வெளியிட்டால் சோனியாவும், ராகுலும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது: உமாபாரதி எச்சரிக்கை!
மோடியை விமர்சித்து உமாபாரதி பேசிய வீடியோவை
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ்
 குறித்த உண்மைகளை பா.ஜனதா வெளியிட்டால் சோனியா

காந்தியும், ராகுல் காந்தியும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது என்று உமாபாரதி எச்சரித்துள்ளார். 


பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான உமாபாரதி, பா.ஜனதாவிலிருந்து விலகி, பாரதீய ஜன்சக்தி என்ற கட்சியை தொடங்கியபோது, தற்போதைய பா.ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். "மோடி வளர்ச்சி நாயகன் அல்ல...அவர் அழிவு நாயகன்" என்று கூறியிருந்தார்.

அதற்கு பின்னர் உமாபாரதி தனது கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பா.,ஜனதாவில் இணைந்துகொண்டார். இந்நிலையில் பா.ஜனதாவிலிருந்து விலகி இருந்தபோது மோடியை உமாபாரதி விமர்சித்து பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டிருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜனதா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் உமாபாரதி இன்று புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உமாபாரதி, " காங்கிரஸ் கட்சியை பார்த்து நான் அனுதாபப்படுகிறேன்.செத்து போன விஷயங்களை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்துவதை சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தந்திரங்களை காங்கிரஸ் பயன்படுத்தினால், நாங்கள் உங்களைப்பற்றிய உண்மைகளை ஏராளமாக வெளியிட வேண்டியதுவரும். அவ்வாறு உண்மைகளை வெளியிட்டால் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல், கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டியது வரும் என எச்சரிக்கிறேன்" என்றார்.

ad

ad