புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத சர்ச்சை: அறிக்கை மூலம் ராமதாஸ் ஆதரவு!

சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும்  உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன்
அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி உள்ளிட்ட தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, விஜயகாந்த் மற்றும் பா.ஜனதா தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.

தாங்கள் கேட்ட 10 தொகுதிகள் கிடைக்காததும், சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளை விஜயகாந்தின் தேமுதிகவிடம் விட்டுக்கொடுத்து கூட்டணியில் இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டதும் ராமதாஸுக்கு பிடிக்கவில்லை என்றும், இருப்பினும் மகனின் நலன்கருதி அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே அவர் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. அதிலும் மோடி சமீபத்தில் 2 முறை தமிழகம் வந்தும் அவருடன் ராமதாஸ் மேடை ஏறாதது பா.ஜனதாவினரிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம்செய்யமாட்டோம்...அவர்கள் என்ன நமக்கு ஆதரவாகவா பிரசாரம் செய்கின்றனர்...? என தேமுதிக, மதிமுக மற்றும் பா.ஜனதா கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தியதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்தே கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறு தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதே சமயம் பிரசாரத்திற்கு செல்வது குறித்து அவர் அதில் எதுவும் குறிப்பிடவில்லை.

இது தொடர்பாகா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மாநிலத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளும், மத்தியில் காங்கிரசும் இழைத்த துரோகங்கள் மற்றும் கொடுமைகளுக்கு கணக்கு தீர்க்கும் நாள் தான் வரும் 24 ஆம் தேதி ஆகும். தமிழகத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத் தான் பாரதிய ஜனதா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வலிமையான அணியை உருவாக்கியிருக்கின்றன.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் வலுவான ஆட்சியை அமைத்து, அதன்மூலம் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தைச் சீரழித்த அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் ஆகும்; தமிழக மக்களின் விருப்பமும் இது தான். தமிழகத்தில் அ.தி.மு.க., .மு.க.வுக்கு மாற்றாக ஓர் அணி உருவாகாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் இப்போது நாம் அமைத்துள்ள கூட்டணியை மனதார வாழ்த்தி வரவேற்கின்றனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நமது அணிக்கு வெற்றி என்ற பயிரை தமிழக மக்கள் விளைவித்துள்ளனர். அதை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் , கடமையும்  பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்  கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.

தமிழகத்தில் நீலகிரி நீங்கலாக 38 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் நலனுக்காக நாம் நினைப்பதையெல்லாம் சாதிக்க முடியும். அத்தகைய வெற்றிக்காக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருதாய் மக்களாக கைகோர்த்து உழைக்க வேண்டும். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வெற்றி ஒன்றே இலக்கு என நினைத்து பாடுபட வேண்டும். குறிப்பாக பாரதிய ஜனதா, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருபடி கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் புதுவையில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனையும் வெற்றி பெறச் செய்வதற்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க.வினர் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ad

ad