புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

தி.மு.க.வில் இணையவில்லை: டி.ராஜேந்தர்
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்திர், சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அன்புக்குரிய நண்பர் ஆற்க்காடு
வீராசாமி மூலம் தி.மு.க. தலைவர் கலைஞர் அழைத்திருந்தார். என் முன்னாள் தலைவர், குரு, என்ற முறையில் அவரை சந்திக்க சென்றேன்.  தி.மு.க.வில் நான் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக சேரவில்லை.

திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம் இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம்.
இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு இலட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை
தி.மு.க.விலே களமிறங்கி கலைஞர் அவர்களும் அவரது மகன் தளபதி அவர்களும் செய்கிறார்கள் பிரசாரம் அவர்களிடத்தில் இருக்கிறது தெம்பு... அவர்கள் விடுகிறார்கள் அம்பு... பரவாயில்லை என்னிடத்திலும் இருக்கிறது தெம்பு என்னிடத்திலும் இருக்கிறது அம்பு என்று நான் செய்யவில்லை வம்பு. என்னதான் ஆட்டக்காரனாக இருந்தாலும் காலம் கைகொடுத்தால் தான் யாருமே களம் இறங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad