-
9 செப்., 2013
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சுவிசில் சிறப்புற இடம்பெற்ற பொன்.சுந்தரலிங்கத்தின் இசைக்கோலங்கள்
கடந்த 06.09.2013 வெள்ளியன்று மாலை சுவிஸ் பேர்ன் நகரில் பிரபல தமிழீழ எழுச்சி பாடகர் பொன் -சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் என்னும் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது கசெரிக்குபக்கவதியன்களை இலங்கை இந்திய கலைஞர்கள் வழங்கி மெருகூட்டி இருந்தார்கள் .ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட .யாழ் இளம்கலை மன்ற ஸ்தாபகரும் வானொலி தொலைக் காட்சி புகழ் கர்நாடக சங்கீத விற்பன்னருமான ,பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டகானாமிர்தம் ஒளித்தட்டு ஒன்றும் அந் நிகழ்வில் வெளியிட்டு வைக்கபட்டது. இந்த ஒலித்தட்டினை சுவிசின் வர்த்தகர்களான இம்போர்ட் தாஸ் உரிமையாளர், சு.ஸ்ரீதாஸ் அவர்களும் மற்றும் சாய் ரேடர்ஸ் உரிமையாளர் இ.ரவீந்திரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.விழாவில் நடனநிகழ்வுகள் ,சிறப்புரைகளும் இடம்பெற்றன . ஆன்மீக சொற்பொழிவாளர் தி.ஸ்ரீஸ்கந்தராசா ,கவிஞர் மதி,எஸ்.கருணாமூர்த்தி,அ .நிமலன்.செ.சுரேஷ் ஆகியோரது வாழ்த்துரைகளும் பேச்சுக்களும் நிகழ்வுற்றன .புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற இந்திய மற்றும் ஈழத்துக்கலைஞர்களோடு இணைந்து, களத்திலும் புலத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.பல நூற்றுக்கணக்கான இளம்பராயத்தினருக்கு சங்கீத வகுப்புக்களை நடாத்திவருவதுடன் புலம் பெயர் நாடுகளில் தனது சங்கீத பணிகளையும் ஆற்றிவருகின்றார்.(நன்றி, நிழல்படம்- கதிரவன் )
நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்; வெளிவிவகார அமைச்சின் மூலம் உத்தியோகபூர்வ நடவடிக்கை
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் 140,000க்கு மேற்பட்ட எம்மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அவர்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். அது இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் நடாத்தப்படும் விசாரணயல்ல. அது ஒரு பன்னாட்டு விசாரணையாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.சி.சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்
“விடுதலைப் புலிகள் போராடி என்ன கண்டார்கள், முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள்.
சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அளிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
8 செப்., 2013
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டி நியூயார்க்கின் யூ.எஸ். டி.ஏ. பில்லி ஜீன் கிங் நேசனல்
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
நாட்டை பிளவுபடுத்துவதோ, குந்தகம் ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல! தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சம்பந்தன்!
நாங்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் தவறான கருத்துக்களை விதைக்கவில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலோ, நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலோ அமையவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு பெரும் வரவேற்பு வழங்கிய வர்த்தகர்கள்!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.நகர தேர்தல் பிரசாரச் சந்திப்பிற்கு நகர வர்த்தகர்கள் பெரும் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் அனைவரும் வேட்பாளர்களுக்கு மா லை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளனர்.
பிரபாகரன் மாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும் – விக்னேஸ்வரன்
இதை நான் மட்டும் சொல்ல வில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ கூட பிரபாகரன் மாவீரன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன்.
இதய அஞ்சலி..
தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனுக்கான
வணக்க ஒன்றுகூடல்
09.09.2013 திங்கள் , 14:30 - 17:00 மணி
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
இன உணர்வும், மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்றுகூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
வடக்கில் அபிவிருத்தியை தொடர்வதா இல்லையா; சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜனாதிபதி பசில் எச்சரிக்கை
துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூவர் கொழும்பில்! அரசாங்கம் செய்வதறியாது தவிப்ப
சா்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூன்று போ் கொழும்புக்கு சென்றுள்ளனா். சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்ற அவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 செப்., 2013
த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.
கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.
நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு
செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
6 செப்., 2013
வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரத்தில் மனோகணேசன்
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்படவில்லை! தாயகம், தேசியம், சுயநிர்ணயம் வெல்வது உறுதி வைத்திய கலாநிதி பத்மநாதன்
இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் வைத்திய கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயார.இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

தம்புள்ளை காளியின் சிலையை உடைத்தவர்கள் விரைவில் அழிந்து விடுவார்கள்!- பிரசன்னா இந்திரகுமார்
தம்புள்ளையில் உள்ள காளியின் விக்கிரகத்தை உடைத்தெறிந்ததன் ஊடாக இலங்கைக்கு அழிவு காலம் ஏற்பட்டுவிட்டது. காளியின் கோபம் நிச்சயம் சிலையை உடைத்தவர்களை விரைவில் அழித்துவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது மேற்குலக நாடுகள் யுத்தம் தொடுப்பதற்கான நெருக்கடிச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா சபையின் அனுமதியின்றி அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுக்கக் கூடாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மீறினால் சிரிய அரசுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்களை வழங்கும் என அதன் அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடந்து வரும் மக்கள் யுத்தத்தில் சில

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதியவர் சுஷ்மிதா பானர்ஜி. இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் 'Escape From Taliban' எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது.
ஐ நா சபை முன்பு தீக்குளித்து இறந்தவர் புங்குடுதீவை சேர்ந்தவரும் சுவிஸ் வலைச் மாநிலத்தை சேர்ந்தவருமான இரத்தினசிங்கம் செந்தில்குமரன்(40) ஆவார் .
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 40வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற ஜெனிவா ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று இரவு அவருக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இவர் தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஒரு தமிழீழ செயற்பாட்டாளர் என்றும் தெரியவருகிறது.
நேற்று அதிகாலை ஐ.நா. முன்றலில் தீக்குளித்த இவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றுகாலை லவுசான் மாநகர சபை உறுப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவை செயலாளருமான த.நமசிவாயத்திடம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததுடன் இவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் காணப்பட்டதாகவும் எனவே இவர் தமிழராக இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்திருந்தனர்.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் இன்று (05.09.2013) அதிகாலை தீக்குளித்த நபர் இன்று மாலை 17.00 மணியளவில் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. இவர் எரிந்த இடத்தில் தமிழீழத் தேசியத்தலைவரின் நிழற்படம் இருந்ததாகவும். சில ஆவணங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர் சுவிற்சர்லாந்தின் சியோன் பகுதியை வதிவிடமாக் கொண்டவர் எனவும் தாயகத்தின் புங்குடுதீவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இன்று மாலை இவர் எரிந்த இடத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வாக்களாளர் வேட்பாளர்களுக்கான தகமைகள் அறிவிப்பு
Tn
தமிழீழத் தாயகத்தின் வடபுல மக்கள் சிறிலங்கா அரசின் வடமாகாண தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சமவேளை புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
முதலாம் தவணை அரசவையினை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் இடம்பெறுகின்றது
|
தற்போதைய செய்தி
ஜெனீவா ஐ.நா சபை வாசலில் தீக்குளித்தவர் மரணம்
படுகாயம் அடைந்திருந்தவ்ர் இன்றுமாலை மரணமாகி உள்ளார்
ஜெனீவா ஐ.நா சபை வாசலில் தீக்குளித்தவர் மரணம்
படுகாயம் அடைந்திருந்தவ்ர் இன்றுமாலை மரணமாகி உள்ளார்
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
மிக கவனமாக காய்களை நகர்த்திக்கொண்டு போகிறோம்: சுயமரியாதை, தன்மானத்தை இழக்க மாட்டோம்: வைகோ பேச்சு
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,
காங்கிரசை எதிர்ப்பது ஒன்றே எங்கள் இலக்கு: வைகோ
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,
ஊழல் என்பது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. 64 கோடி ரூபாய் போர்பஸ் ஊழல் செய்த ராஜீவ்காந்தி அரசை மக்கள் தூக்கி எரிந்தார்கள்.
5 செப்., 2013
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.
16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
மேலதிக தகவல்கள் வெகு விரைவில்...
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு.
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம்! கட்சிப் பதவியும் பறிப்பு!
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய செய்தி
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு?
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இருந்தபோதிலும் இது தொடர்பில் எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக விபரம் கிடைப்பின் அறிவிப்போம்
Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த; அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா என்று சம்பந்தன் சவால்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று
வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு; ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு
வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
புனர்வாழ்வு முகாமில் இன்னும் 241 முன்னாள் போராளிகளே உள்ளனராம் ; என்கிறது அரச அறிக்கை
முன்னாள் போராளிகள் 108 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்
முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும்
மலையகம் என்ற ஒரு சமுதாயம், இலங்கையில் இருக்கின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டிய கடமையிலிருந்து மலையக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தவறி விட்டனர்.
இது வேதனைக்குரிய ஒரு விடயமென்று கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளருமான கே.ரி.குருசாமி தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)