-
11 டிச., 2013
வட மாகாணசபையின் மூன்றாவது அமர்வில் கவனவீர்ப்பு போராட்டம்
வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பமாகியது.
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் இன்று முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ. நா பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.
நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு பிரார்த்தனை, ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும் என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது,
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?
இதற்குப் பதிலளித்த கவிஞர்,
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது,
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?
இதற்குப் பதிலளித்த கவிஞர்,
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.
10 டிச., 2013
இலங்கை மீது விசாரணை ரோமில் சனியன்று ஆரம்பம்; இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வு
இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் "நிரந்தர மக்கள் சபை' இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கான தேர்வில் இங்கி லாந்து அணியின் முன்னாள் வீரர் போல் பார் ப்ராஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வு தொடர்வில் நியமிக்கப்பட்டிருந்த குழுவே அவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள கிரஹம் போர்ட் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் பயிற்றுவிப்பாளர் பதவி யிலிருந்து விலகவுள்ளார்.
மாணவர் இருவருடன் நிர்வாணமாக இருந்த தேரருக்கு விளக்கமறியல்
ஆண் மாணவர்கள் அறுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார்,
ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,
9 டிச., 2013
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.
8 டிச., 2013
யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது.
ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
ஷீலா தீட்சித்தை பின்னுக்குத் தள்ளிய கேஜ்ரிவால்
டில்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். டில்லி சட்டப் பேரவைத் தொகுதியில், சற்று முன்னர் வரை ஷீலா தீட்சித் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அவரைப் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை பெற்றுள்ளார்.
ராஜஸ்தான்: பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுயில் முன்னிலையில் உள்ளது.
7 டிச., 2013
புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையின் அரச மரத்தடிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள விகாரைக்கு பின்புறமாக அமைந்திருந்த (அங்காடி) பல்பொருள் விற்பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றாக எரிந்து சாம்பரானது.
2009க்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலைகளுடன் கமலுக்கு தொடர்பு உள்ளதா? பொலிஸார் ஆய்வு
2009 ம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப்
தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய
புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்..
சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால்,
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் அமைப்பதை கண்டித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனது ராஜினாமா பற்றி ராஜ்யசபாவில் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
மூதூர் படுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி!- இராணுவம்
ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கமலேந்திரன் வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான
6 டிச., 2013
தொடரும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களின் தோல்வி: அதிர்ச்சியில் மஹிந்த அரசாங்கம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளில், தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: விக்னேஸ்வரன் சவால்
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன
சம்போ சங்கரா!
வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல்
இன்று உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிக்கான குழுக்கள் தெரிவாகவுள்ளன
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள் Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள் Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
5 டிச., 2013
ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு
- சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட துக்கியாம்பாளையத்தில் வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)