புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

எம்.பிக்களின் கொடுப்பனவு அதிகரிப்பானது பாதகச் செயல் : வாசுதேவ நாணயக்கார

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படுவது பாதகச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த கொடுப்பனவு 500 ரூபாவிலிருந்து 20000 ரூபா வரையில் உயர்த்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சில ஊடகங்களில் நாளாந்த வரவுக் கொடுப்பனவு 19500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்படாது இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொடுப்பனவு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு அதனை மக்களுக்கு நலன் கிடைக்கக்கூடிய வழிகளில் செலவிடுவது குறித்து கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ad

ad