![]() எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறை, அரசியல் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “ நிரூபமா ராஜபக்ச எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார். அதனால் உறவு வேறு அரசியல் வேறு. அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்? 1990 - 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிக்கா ஆகியோரிடம் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் |
இப்போதைய செய்தி
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்






.jpg)

.jpg)



.jpg)





.jpg)








.jpg)

கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.jpg)





ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார்


