புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

சண் சீ கப்பலில் தொடரும் இழுபறி - கனேடிய நீதிமன்றம் குழப்பத்தில் 
கனடாவில் ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஈழத் தமிழர்களை நாடுகடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

 
இந்த நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையானதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கவிருப்பதாக கனேடிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
கணவன் மனைவி என இருவரும், மற்றுமொரு ஈழத் தமிழரும் கடந்த 2010ம் ஆண்டு எம்.வீ.சண் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்தனர். அவர்கள் மூவரும் குறித்த கப்பலில் பணியாற்றி இருந்த நிலையில், அவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் கனேடிய குடிவரவுத் துறை திணைக்களம் அறிவித்திருந்தது.
 

ad

ad