புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014

தலைவர் பதவியை உதறினார் சி.வி.கே 
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை  இராஜினாமாச் செய்துள்ளார்.


வடமாகாண சபையின் செயற்பாடுகள் சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் மேற்படி பதவியை இராஜினாமாச் செய்வதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த நிலையமானது நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மற்றும் வசதி குறைந்த சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து  உதவிகளை பெற்று பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது.

இதேவேளை யாழ்.  மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவராகவும் சி.வி.கே.சிவஞானம் பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad