""ஹலோ தலைவரே...…சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துக்கிட்டிருந்தாலும் எம்.பி. தேர்தல் விஷயத்தில்தான் ஜெ. ரொம்ப கவனமா இருக்காராம். ஒவ்வொரு நாளும் உளவுத்துறை மூலமா அப்டேட் ரிப்போர்ட் போய்க்கிட்டிருக்காம்.''
-
9 ஏப்., 2013
’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!
அஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.
2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. pஅதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. பெயர் விபரம் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன
குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு.
8 ஏப்., 2013
வடமாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா |
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார்
|
வீட்டை விட்டு ஓடிவர மறுப்பு! காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில்
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது.இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது.
நடிகர் வடிவேலு மகளுக்கு
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
மதுரையில் நடந்த ரகசிய திருமணம்!
நடிகர் வடிவேலுவின் மூத்த மகளூக்கு இன்று (7.4.2013)மதுரையில் திருமணம் நடைபெற்றது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்துகொண்டனர். பலருக்கும் இந்த திருமணம் நடைபெறுவது தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் வடிவேலு.
தமிழீழ மாணவர் அமைப்பின் வானொலி தனது ஒலிபரப்பை வெற்றி கரமாக ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
http:// eelamstudents.caster.fm/
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
http://
ஈழவிடியல்
eelamstudents.caster.fm
விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
பி.பி.ச
விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன் தெரிவித்துள்ளார்.
7 ஏப்., 2013
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை!- மாவை
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
6 ஏப்., 2013
Stalin Venkat : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .
மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!
இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .
மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்டு!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து தணிக்கை துறை அதிகாரிகள் அங்கு சென்று கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் பல்கலைக்கழகத்தின் நிதியை பல்வேறு வகைகளில் மோசடி செய்து முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துணைவேந்தர் டாக்டர் ராமநாதனை சஸ்பெண்டு செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பி
விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..
612 இந்திய முதலைகள்… இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது.
நேற்று வெளியான க.பொ த சா தர பெறுபேறுகளின் உச்ச கல்வி சித்திகளை யாழ் மாணவர்கள் தக்க வைத்தன்ர் இந்துகல்லூரியின் 18 மாணவர்கள் 9A சித்திகளையும் 37 மாணவர்கள் 8A சித்திகளையும் 13 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்
9 பாடங்களிலும் A சித்தி பெற்ற பாராட்டுக்குரிய மாணவர்கள் இவர்கள் தான்
கி.சண் முகேசன்
ப..ஆதீபன்
ரா.சுதர்சன்
க.தர்சிகன்
சு.வித்யாசாகர்
ம.ஜெசுரன்
சு..கரிவர்த்தணன்
கி.கீர்த்தனன்
ர.கோபிசாந்
து .நிலக்ஷன்
த .நினுசன்
செ .சேந்தன்
சி. .சிவ்செநதூரன்
த..சொபிதன்
சி . தேனுகாணன்
த.தினேசன்
தா..டிலக்ஷன்
கி.லோகிசன்
ப.தினேசன்
9 பாடங்களிலும் A சித்தி பெற்ற பாராட்டுக்குரிய மாணவர்கள் இவர்கள் தான்
கி.சண் முகேசன்
ப..ஆதீபன்
ரா.சுதர்சன்
க.தர்சிகன்
சு.வித்யாசாகர்
ம.ஜெசுரன்
சு..கரிவர்த்தணன்
கி.கீர்த்தனன்
ர.கோபிசாந்
து .நிலக்ஷன்
த .நினுசன்
செ .சேந்தன்
சி. .சிவ்செநதூரன்
த..சொபிதன்
சி . தேனுகாணன்
த.தினேசன்
தா..டிலக்ஷன்
கி.லோகிசன்
ப.தினேசன்
5 ஏப்., 2013
யாழ்.விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்
யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த உதயன் மீதே தாக்கு; ஐ.தே.க. கடும் கண்டனம் |
"உதயன்' பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.
|
கெயில் அதிரடி: மும்பையை 2 ஓட்டங்களால் திரில் வெற்றிக்கொண்டது பெங்களூர்
பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயித்த 157 என்ற வெற்றி இலக்கை போராடி அடைய முடியாத மும்பை
இந்தியன்ஸ் அணி 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இதேவேளை கெயிலின் அதிரடியுடன் பெங்களூர் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
6ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வொரியர்ஸ் ஆகிய 9 அணிகள்
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி, தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக தமிழக மாணவர்களின் எழுச்சி காணப்படுகின்றது!- காசி ஆனந்தன், பழ.நெடுமாறன்
இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி, தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில்
4 ஏப்., 2013
சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; அக்சன் பாம் வலியுறுத்தல் |
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர்
|
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.
""மேடம்... நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன். கடந்த 2006-ஆம் வருஷத்துல என் அம்மா, எங்கப்பா சுந்தர்ராஜன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கினதும் சொக்கம்புதூர் செந்தில்ங்கிறவரு கூடதான் கணவன்- மனைவியா வாழ்ந்தாங்க. அவருதான் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டாரு. என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வச்சாரு. என்னைய மட்டுமில்லை... அவரால எங்கம்மா பெத்த என் தம்பியான அர்ஜுனையும் நல்லாப் பார்த்துக்கிட்டாரு
தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம்
துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.
3 ஏப்., 2013
இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு நேரக்கூடாது!- பிரதமருக்கு வைகோ கடிதம்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த போது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத் தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத் தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப் போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர்.
இதே போன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்குள்ளான காட்சியை சனல்4 தொலைக்காட்சி காணொளி மூலம் 2010ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரிணியும் கொல்லப்படுவார்.
எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹரிணி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும், ஜஸ்வந்த் சிங்கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்துள்ளார்.
இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்துள்ளனர்.
30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல.
ரமேஷ் கன்னா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)