புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

வல்வெட்டித்துறை நகரசபையில் ஈ பி டி பி கூட்டமைப்புக்கு ஆதரவு 
பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்திருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று ஏற்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு – செலவுத் திட்டம்
நிறைவேறியது. ஆதரவாக வாக்களித்தவர்களில் இருவர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நகரசபை நுழைவாயிலில் குவிந்திருந்த தற்போதைய தலைவர் அனந்தராஜின் ஆதரவாளர்கள் குறித்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட கூட்டமைப்பின் ஜந்து உறுப்பினர்களையும் உள்ளே செல்லவிடாது திருப்பி அனுப்பினர். இந்நிலையினில் திருப்பி அனுபப்பட்ட ஜவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளே அனுப்ப முயற்சிகள் நடந்திருந்தன. எனினும் அனந்தராஜின் ஆதரவாளர்கள் இதனை அனுமதித்திருக்கவில்லை. இதையடுத்து பொலிஸார் தம்முயற்சி வெற்றிருக்காத நிலையில் திரும்பி சென்றுள்ளனர்.
இதனிடையே உள்ளே சத்தமின்றி 2014 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஏற்று அங்கீகரிப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜவரும்  ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனார். இதையடுத்து அனந்தராஜின் ஆதரவாளர்களிற்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களிற்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தது. அங்கு பிரச்சனமாகியிருந்த இலங்கைப்பொலிஸார் இதனை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தனர்.
கூட்டமைப்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் சார்பு தலைவரான அனந்தராஜினை கவிழ்க்க தமிழரசுக்கட்சியின் குலநாயகம் தலைமையிலான அணி முற்பட்டுள்ளதாக அண்மையிலே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டமும் முதலில் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இவ்வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிலும் அது தோற்கடிக்கப்பட்டிருப்பின் தலைவர் அனந்தராஜ் பதவியிழந்தவராகியிருப்பார்.

ad

ad