ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.